Friday 3 January 2014

அங்காயப்பொடி

தேவை :
தனியா- 1/4 கப், மிளகு - 5 டீஸ்பூன், மிளகாய்  வற்றல்- 6, சீரகம்- 2 டீஸ்பூன்,   பெருங்காயம் சிறு துண்டு, வேப்பம்பூ -  1/8  கப்,  சுண்டை  வற்றல் -20,  மணத்தக்காளி  வற்றல் - 5 டீஸ்பூன், ஆய்ந்த கறிவேப்பிலை - 1/4  கப்,  சுக்கு - 1 சிறிய  துண்டு,  ஓமம் - 2 டீஸ்பூன்,  நல்லெண்ணெய் - 5 டீஸ்பூன்
செய்முறை :  
வெறும்  வாணலியை  கேஸில்  வைத்துக்  காய்ந்ததும்  அதில்  வேப்பம்பூ  போட்டுக் கருநிறமாக வறுத்தெடுக்கவும். அதிலேயே சுண்டைக்காய் முதல் ஓமம்  வரைக் கொடுத்தவற்றை ஒவ்வொன்றாகப்   போட்டு சிவக்க வறுத்தெடுக்கவும். 
தனியா, மிளகு, மிளகாய்  வற்றல், சீரகம்,  பெருங்காயம் ஆகியவற்றை 2 ஸ்பூன் எண்ணையில் வறுக்கவும்.
தேவையான  உப்பு   சேர்த்து மிக்ஸியில்   பொடி செய்யவும்.  
சாதத்தை ஆறவிட்டு ,  அதில் நல்லெண்ணெய்  சேர்த்து தேவையான  பொடி  சேர்த்து பிசையவும்.  நெய்யை  சுட   வைத்து  அதில் கடுகு, கறிவேப்பிலை  தாளித்து  சுட்ட  அல்லது பொரித்த அப்பளம், தயிர்ப் பச்சடியுடன்  சாப்பிடவும். 

இந்த  சாதம்  பிரசவித்த  பெண்களுக்கு அஜீரணம்   வாயு ஏற்படாமல்  தடுக்கும்.  தினமும் சிறிதளவு சாப்பிட   கைக்குழந்தைக்கு  மலச்சிக்கல்,  அஜீரணம்  வராது. பெரியவர்களுக்கும்  வயிற்றுப் போக்கு, வயிற்றுப் பொருமல்,  அஜீரணம்  ஏற்படும்போது  இந்த அங்காயப்பொடி சாதம்  சாப்பிட உடனடி நிவாரணம் கிடைக்கும். நாம்  மறந்து  விட்ட   அந்நாளைய ஆரோக்கிய சமையலில்  இதுவும் ஒன்று.

No comments:

Post a Comment