Saturday 23 April 2016

நட்ஸ் பக்கோடா


தேவையான பொருட்கள்:
முந்திரி பருப்பு - 25கிராம்
பாதாம் பருப்பு - 20 கிராம்
கடலை மாவு - 100கிராம்
அரிசி மாவு - 50கிராம்
வெங்காயம் பெரியது- 2
பச்சை மிளகாய் - 2 அல்லது 3
இஞ்சி -  1 சிறுதுண்டு
சமையல் சோடா - 1சிட்டிகை
பெருங்காயப்பொடி - ஒரு சிட்டிகை
எண்ணெய், உப்பு தேவையான அளவு
செய்முறை:
முந்திரி  பருப்பை சிறிய துண்டுகளாக உடைத்துக் கொள்ளவும்.பாதாமை வெந்நீரில் ஊறவைத்து சிறு துண்டுகளாக்கவும்.
வெங்காயத்தை பொடியாக அரிந்து கொள்ளவும்.
பச்சை மிளகாய், இஞ்சி, இவற்றை மிக்ஸில் அரைத்துக் கொள்ளவும்.
ஒரு அகலமான பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, சமையல் சோடா, உடைத்த முந்திரி, பாதாம்  பருப்பு, வெங்காயம்,  இவற்றுடன் மிக்ஸியில் அரைத்த விழுது, உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
சிறிது எண்ணெயை சூடாக்கி கலவையில் கொட்டவும்.
சிறிது தண்ணீர் சேர்த்து கலவையை நன்றாக பிசைந்து கொள்ளவும்.
ஒரு வாணலியில் பொறிப்பதற்கு தேவையான எண்ணெயை சூடாக்கவும்.
மாவு கலவை சிறிது எடுத்துக் கொண்டு பிசிறினால் போல் காய்ந்த எண்ணெயில் போட்டு பொறிக்கவும். சிவந்தவுடன் எடுத்து வடிய விடவும்.
இனிமையான மாலை நேர தேநீருக்கு மொறு மொறு முந்திரி பக்கோடா ரெடி! 



No comments:

Post a Comment