Thursday 28 April 2016

தக்காளி தோசை


தேவை
புழுங்கலரிசி – 1 ½ தம்ளர்
பச்சரிசி – ½ தம்ளர்
துவரம்பருப்பு – 2 மேஜைக்கரண்டி
தக்காளி – நடுத்தர அளவில் 4 (அ) 5
மிளகாய் வற்றல் –  4 (அ) 5
இஞ்சி – 1 சிறு துண்டு
பெருங்காயம் – ¼ தேக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:-

அரிசிகளையும், துவரம்பருப்பையும் ஊற வைக்க வேண்டும். இவைகள் நன்கு ஊறிய பின் இத்துடன் தக்காளி, மிளகாய்வற்றல், இஞ்சி, பெருங்காயம், உப்பு,கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
சூடான தோசைக்கல்லில் அடை மாதிரி சற்று கனமாக  சுற்றிலும் எண்ணெய் விட்டு வார்த்து எடுக்கவும்.
தேங்காய் சட்டினியில் போட்டுக்கடலைக்கு பதிலாக வேர்க்கடலையை சேர்த்து அரைத்து இந்த தோசைக்குத் தொட்டுச் சாப்பிட்டால் வித்யாசமான ருசியாக இருக்கும்.

No comments:

Post a Comment