Monday 16 May 2016

அள்ளிப் போட்ட ரசம்


இதற்கு கொட்டு ரசம் என்றும் பெயர். இதற்கு பருப்பை வேக விடாமல் மிக்ஸியில் ஒன்றிரண்டாகப் பொடித்துப் போட வேண்டும். புளியையும் அப்படியே போடலாம். அவசரத்திற்குச் செய்யும் சுலப ரசம் இது!

தேவை

துவரம் பருப்பு - 2½ டீஸ்பூன்
புளி – சிறு எலுமிச்சை அளவு
(கொட்டை நார் நீக்கி கிள்ளிப் போடவும்)
காயம், உப்பு, தக்காளி, நெய், கடுகு, ரசப்பொடி, மிளகாய் வற்றல், கொத்துமல்லி முதலியன.

செய்முறை


2 கப் நீரில் புளி, உப்பு, ரசப்பொடி, காயம், தக்காளி, துவரம் பருப்புப் பொடி போன்றவற்றைப் போட்டு கொதிக்க விட்டு, பொடி வாசனை போய் 1½ கப் ஆனதும், மீதிக்கு வெறும் தண்ணீர் விட்டு விளாவி, நுரைத்து வந்ததும் இறக்கி தாளிக்கவும். கொத்துமல்லி சேர்க்கவும்.

இதையே, பருப்பை அப்படியே போடாமல் சிறிது தண்ணீரில் ஊறவைத்து அரைத்து அதை நீரில் கரைத்து விளாவலாம்.

No comments:

Post a Comment