Sunday 8 May 2016

முருங்கைக்காய் பொரித்த குழம்பு

தேவை:     

முருங்கைக்காய் -- 3
துவரம்பருப்பு -- 1/4 கப்
சாம்பார்பொடி -- 1 டீஸ்பூன்
உப்பு -- தேவையான அளவு

அரைத்துவிடுவதற்கு
எண்ணெய் -- 2 டீஸ்பூன்
பெருங்காயம் -- 1 சிறு துண்டு
உளுத்தம்பருப்பு -- 2 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் -- 2
சீரகம் -- 11/2 டீஸ்பூன்
துறுவிய தேங்காய் -- 5 டேபிள்ஸ்பூன்

தாளிக்க
தேங்காய் எண்ணை -- 2 டீஸ்பூன்
கடுகு -- 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு -- 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை -- 2 கொத்து





செய்முறை

1. துவரம்பருப்பை வேக விடவும்.

2. தேவையான தண்ணீரில் முருங்கைக்காய்களை 2 அங்குல நீள அளவில் நறுக்கி கேஸில் வைத்து கொதிக்க விடவும்.




3. அதில் சாம்பார்பொடி, உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும். 

4. எண்ணெயில் பெருங்காயம், உளுத்தம்பருப்பு, மிளகாய் வற்றலை வறுக்கவும். அத்துடன் சீரகம், தேங்காய் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும்.








5. முருங்கைக்காய் நன்கு வெந்ததும் அரைத்த விழுது சேர்த்து கொதிக்க விடவும்.

6. வெந்த துவரம் பருப்பும் சேர்க்கவும்.எல்லாம் ஒன்று சேர்ந்து குழம்பு பதம் வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கவும்.



7. தேங்காய் எண்ணெயை இரும்புக்கரண்டியில் காய வைத்து கடுகு போட்டு வெடித்ததும், உளுத்தம்பருப்பு போட்டு சிவந்ததும் குழம்பில் கொட்டவும்.










கறிவேப்பிலையைக் கிள்ளிப் போட்டு நன்கு கலந்து சாதத்துடன் சாப்பிட சூப்பர் சுவையாக இருக்கும்!




No comments:

Post a Comment