Sunday 1 May 2016

தீபாவளி மருந்து

தீபாவளி சமயம் ஜீரணத்திற்காக செய்யப்படும் இந்த மருந்தை சாதாரண நாட்களிலும் செய்து வைத்துக் கொள்ளலாம்.
தே

ஓமம் - 1/4 கப்
மிளகு – 4 டீஸ்பூன்
சுக்கு – 1 துண்டு
கண்ட திப்பிலி – 10 குச்சிகள்
அரிசி திப்பிலி – 1 டீஸ்பூன்
சீரகம் - 2 டீஸ்பூன்
ஏலக்காய் – 3
கிராம்பு – 5
நெய் - 1/4 கப்
வெல்லம் – 150கிராம்
தேன் -  3 டீஸ்பூன்.
செய்முறை

ஓமத்தைக் களைந்து கல்லரித்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். 

மிளகு, சீரகம், கண்ட திப்பிலி, அரிசி திப்பிலி, ஏலம், கிராம்பை வாணலியில் சூடுவர வறுத்து மிக்ஸியில் பொடி செய்யவும். 
சல்லடையில் சலிக்கவும். 




கப்பியை ஓமத்துடன் ஊறவைத்து, மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். 
அரை பட்டதும் அதிலேயே இந்தப் பொடியையும் போட்டு அரைக்கவும். தண்ணீர் போதாவிடில், சிறிது சேர்த்துக் கொள்ளவும். 



(அரைத்த விழுதின் அளவு வெல்லம் சேர்க்க வேண்டும்).
அரைத்த மருந்து விழுதை மிளகு குழம்பு பதத்தில் கரைத்து, அடி கனமான பாத்திரத்தில் வைத்து, கேஸை சின்னதாக்கி, கைவிடாமல் கிளறவும். 



நீர் வற்றி, மருந்து சாமான்கள் வெந்து கெட்டியானதும், நெய்யைக் கொஞ்சம் கொஞ்சமாக விடவும். 



நன்கு சேர்ந்து கொண்டதும் ஒட்டாமல் நெய் பிரியும் சமயம் இறக்கி, தேனைச் சேர்த்துக் கிளறவும். 



இதை ஃபிரிட்ஜில் வைத்து உபயோகிக்கவும். 
அஜீரணம், வயிற்றுக் கோளாறுகளுக்கு ஏற்ற மருந்து இது.





 .

No comments:

Post a Comment