Saturday 21 May 2016

பிடிகருணை மசியல்

தேவை
பிடிகருணைக்கிழங்கு 5
இஞ்சி  ஒரு சிறிய துண்டு
பச்சை மிளகாய்  3
பெருங்காயபொடி  3 சிட்டிகை  
கடுகு 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள்  2 சிட்டிகை
கொத்தமல்லித் தழை  சிறிதளவு
எலுமிச்சம்பழம்  ஒரு மூடி
எண்ணெய் 2 டீஸ்பூன்
உப்பு  தேவையான அளவு
செய்முறை
பிடிகருணைக்கிழங்கை தோலி நீக்கி, சிறுதுண்டுகளாக்கி குக்கரில் வேகவைக்கவும்.
இஞ்சி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும்.
வெந்த கருணைக்கிழங்கை சிறிதளவு நீர் விட்டு நன்கு மசிக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, இஞ்சி, பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்.
மசித்த கருணைக்கிழங்கு, உப்பு  சேர்க்கவும். நன்கு கட்டிகளின்றி மசிக்கவும்.
எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து, நறுக்கிய கொத்தமல்லித் தழை சேர்த்துக் கிளறி இறக்கவும்.
நன்கு தோல் உலர்ந்த பழைய கிழங்கை வாங்கினால் அரிப்பு இருக்காது. பிடிகருணைக்கிழங்கு மூலநோய் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது.

No comments:

Post a Comment