Monday 9 May 2016

காஜூ சேலஞ்ச்

தேவையான பொருட்கள்:
மைதா – 1 கப்
நெய் – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – 1 சிட்டிகை
பூரணம்:
பால் 1 லிட்டர் (கோவா காய்ச்சி அதில் ஒரு டீஸ்பூன் சர்க்கரை சேர்க்கவும்)
பாதாம் – 10
பொடித்த முந்திரி - ½ கப் (பாதாம், முந்திரியை நெய்யில் வறுத்து மிக்ஸியில் பொடியாக்கவும்)
ஏலப்பொடி - ½ டீஸ்பூன்
பாகிற்கு:
1½ கப் சர்க்கரை
கேசரி கலர் – சிட்டிகை
ஏலப்பொடி, நெய், எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
மைதா, நெய், உப்பை தேவையான அளவு நீர் சேர்த்து, பூரி மாவு போல் கெட்டியாகப் பிசைந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
கோவா, பாதாம்-முந்திரி பொடி, ஏலப்பொடி, நெய் – ஒரு டீஸ்பூன் சேர்த்து நன்கு கலந்து விழுதாக்கவும்.
பிசைந்த மாவை சப்பாத்திகளாக இடவும். ஒரு சப்பாத்தியின் மேல் கோவா விழுதை சமமாகத் தடவி, மேலே மற்றொரு சப்பாத்தி போட்டு இறுக்கி சுருட்டி கத்தியால் சிறு துண்டுகளாக்கவும்.
சர்க்கரையுடன் அதே அளவு நீர் சேர்த்து நன்கு கரைய விடவும். அதில் கேசரி கலரும், ஏலப்பொடியும் சேர்க்கவும்.
எண்ணெயை மிதமாகக் காய வைத்து, அதில் வெட்டிய சப்பாத்தி துண்டுகளைப் பொன்னிறமாகப் பொரித்து, சூட்டுடன் சர்க்கரைப் பாகில் ஊற விடவும். நன்கு ஊறியதும், எடுத்து வைக்கவும்.
சுவையான இந்த ‘காஜூ சேலஞ்ச்’ உங்கள் நாவுக்கு ஒரு சேலஞ்சான இனிப்பு!

No comments:

Post a Comment