Wednesday 22 June 2016

ராஜ்மா பட்டாணி சாதம்

தேவை
பாஸ்மதி அரிசி - 1 கப்
ராஜ்மா - 1/4 கப்
கேரட் - 1
பச்சை பட்டாணி - 1 கப்
வெங்காயம் - 1
உப்பு - தேவைகேற்ப்ப


அரைக்க 
தக்காளி - 1
பூண்டு - 1 பல்
இஞ்சி- 1 துண்டு
பச்சை மிளகாய் - 3
கொத்தமல்லி - கொஞ்சம்
காரப்பொடி - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்


தாளிக்க 
எண்ணெய் - 4  டீஸ்பூன்
நெய் - 2 டீஸ்பூன் 
பட்டை - 1 துண்டு
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
பிரிஞ்சி இலை - 2

ராஜ்மாவை முதல் நாளே ஊறவைக்கவும்.மறுநாள் பட்டாணி, நறுக்கிய கேரட்டுடன் சேர்த்து குக்கரில் வேக வைக்கவும்.வேக வைத்த தண்ணீரை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

பாஸ்மதி அரிசியை நன்கு களைந்து பட்டாணி, ராஜ்மா வேகவைத்த நீருடன் மேலும் நீர் சேர்த்து உதிரியாக வேகவைத்து கொள்ளவும்.

வெங்காயம், தக்காளி எல்லாவற்றையும் பொடியாக நறுக்கவும்.

ஒரு வாணலியில் 3 டீஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் தாளிக்க உள்ளதைப் போட்டு தாளிக்கவும்.

பின் அதில் வெங்காயம், தக்காளி, அரைத்த மசாலாசேர்த்து பச்சை வாசனை போக, எண்ணெய்  பிரிய நன்கு வதக்கவும். அத்துடன் முன்பே பிரஷர் குக்கரில் வேக வைத்த பட்டாணி,ராஜ்மா எல்லாவற்றையும் போட்டு வதக்கவும்.
நன்றாக வதங்கியபின் அதில் வேகவைத்துள்ள சாதத்தை போட்டு, தேவையான உப்பு சேர்த்து கொஞ்சம் நெய் விட்டு ஒன்றாகக்  கலந்து மேலே கொத்தமல்லி இலை போட்டு அலங்கரித்து பரிமாறவும்.

இதற்க்கு தொட்டு கொள்ள வெங்காய, தக்காளி தயிர் பச்சடி, பொரித்த அப்பளம் நன்றாக இருக்கும்.

1 comment: