Monday 23 December 2019

திருவாதிரை களி


திருவாதிரை களி
தேவை
அரிசி..1 கப்
துவரம்பருப்பு..1/8 கப்
வெல்லம்..1 1/2 கப்
தேங்காய் துருவல்..1/4 கப்
மிந்திரி..10
நெய்..1/4 கப்
ஏலப்பொடி..1 டீஸ்பூன்

செய்முறை
அரிசியை வெறும் வாணலியில் சிவக்க வறுக்கவும். மிக்ஸியில் கரகரப்பாக அரைக்கவும். துவரம்
பருப்பை 3/4 பதத்தில் வேகவிடவும்.

குக்கரில் இரண்டரை கப் தண்ணீர் கொதிக்க விடவும். அதில் வெல்லம் சேர்த்து நன்கு கரைய விடவும். அதில் தேங்காய்த் துருவல், வெந்த துவரம் பருப்பு, 4 ஸ்பூன் நெய் சேர்த்து கொதித்ததும் அரைத்த அரிசியை சேர்த்து கிளறவும்.

தண்ணீர் கொதித்ததும் குக்கரை மூடி ஆவி வந்ததும் வெயிட் போட்டு , கேஸை சிம்மில் வைக்கவும். 10 நிமிடம் கழித்து அணைத்து விடவும்.

திறந்து களியை நன்கு கிளறி விட்டு, ஏலப்பொடி சேர்த்து, மீதமுள்ள நெய்யில் மிந்திரி வறுத்துப் போட்டு நன்கு கிளறவும்.இதற்கு தொட்டுக் கொள்ள எழுகறிக் குழம்பு சூப்பர் காம்போ!

Friday 20 December 2019

ட்ரைஃப்ரூட்ஸ் பர்ஃபி

இந்த ஏகாதசிக்கு எங்காத்து குட்டிக் கண்ணனுக்கு ட்ரைஃப்ரூட்ஸ் பர்பி செய்து நிவேதனம் செய்தேன். அதன் செய்முறை இதோ...

ட்ரைஃப்ரூட்ஸ் பர்ஃபி

பாதாம்,மிந்திரி, பிஸ்தா...தலா 1/4 கப்,
வால்நட்...6
அத்திப்பழம்(figs)..5
பேரீச்சை..5
திராட்சை..10
தேங்காய்த்துருவல்..4டீஸ்பூன்
ஏலப்பொடி
நெய்..2டீஸ்பூன்
பாதாம்,மிந்திரி,பிஸ்தா,வால்நட் சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக அரைக்கவும். அதை எடுத்துவிட்டு  அதிலேயே துண்டுகளாக்கிய அத்தி,பேரீச்சை மற்றும் திராட்சையை சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். நைஸாக அரைக்கக் கூடாது.
வாணலியில் நெய் விட்டு தேங்காய்த் துருவல் சேர்த்து சற்று வதக்கி, அதில் அரைத்த பாதாம் கலவையைச்  சேர்க்கவும். 5 நிமிடம் வதக்கி அதில் பேரீச்சை கலவை சேர்த்துக் கிளறவும். இரண்டு கலவையும் சேர்ந்து கொள்ள அடுப்பை சிறியதாக வைத்து 5நிமிடம்  தீயாமல்  கவனமாகக்  கிளற வேண்டும்.ஏலப்பொடி சேர்க்கவும்.
கீழே இறக்கி வைத்து  நன்கு கலந்து கை பொறுக்கும் சூட்டில்,கையில் நெய் தடவிக் கொண்டு இரண்டாகப் பிரித்து இரண்டு நீள்வட்டமாகச் செய்யவும்.
நன்கு ஆறியதும் அவற்றை வட்டமாக நறுக்கவும். நெய் தடவிய தட்டில் கொட்டி சதுர துண்டுகளாகவும் செய்யலாம். ஃப்ரிட்ஜ்ல் வைத்து உபயோகிக்கவும்.


Saturday 16 November 2019

பிரண்டை குழம்பு


தேவை..
பிரண்டை ..1சிறு கட்டு
மிளகு..3 டீஸ்பூன்
சீரகம்..1டீஸ்பூன்
தனியா..1டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு..1டீஸ்பூன்
கறிவேப்பிலை..10 கொத்துகள்
புளி..சிறு உருண்டை
உப்பு..தேவையான அளவு
பெருங்காயம்..சிறு துண்டு
கடுகு..1டீஸ்பூன்
நல்லெண்ணெய்..6-8 டீஸ்பூன்

செய்முறை..
பிரண்டை அரிக்கும் தன்மை உடையது. அதன் மேல் தோலியை நீக்கி சிறு துண்டுகளாக்கவும்.

ஒரு வாணலியில் 2ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் பெருங்காயம் பொரித்து, அத்துடன் உளுத்தம்பருப்பு, சீரகம்,தனியா போட்டு சிவந்ததும் எடுத்துவிட்டு அதிலேயே மிளகு வறுக்கவும். கடைசியில் பிரண்டை போட்டு நன்கு வதக்கி கறிவேப்பிலை சேர்த்து சற்று வதக்கி எடுக்கவும்.

வறுத்த சாமான்களுடன் புளி, உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும்.

வாணலியில் மீதமுள்ள எண்ணெய் விட்டு கடுகு தாளித்து அதில் அரைத்த கலவையை எண்ணை பிரிய வதக்கவும். பிரண்டை குழம்பு ரெடி. சாதத்தில் பிசைந்தும் தயிர் சாதத்துக்கு தொட்டுக் கொண்டும் சாப்பிடலாம்.

பிரண்டை மருத்துவ குணம் நிறைந்தது. வாய்வு பிடிப்பு, சுலுக்கு, வயிற்றுக் கோளாறுகளைப் போக்கும் தன்மை உடையது. அஜீரணம், முழங்கால் இடுப்பு வலிகளைப் போக்கும்.அடிக்கடி சாப்பிட உடல் அழகு பெறும்.






Friday 3 May 2019

நாரத்தங்காய் தொக்கு


தேவை
நாரத்தங்காய்...4
இஞ்சி...சிறுதுண்டு
காரப்பொடி...3 டேபிள்ஸ்பூன்
பெருங்காயப்பொடி...1/2 டீஸ்பூன்
வெந்தய மஞ்சள்பொடி...1டீஸ்பூன்
நல்லெண்ணெய்...1/4 கப்
கடுகு...1டீஸ்பூன்
உப்பு...தேவையான அளவு

செய்முறை
வெந்தய மஞ்சள்பொடி...6டீஸ்பூன் வெந்தயத்தை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து, அத்துடன் 3டீஸ்பூன் மஞ்சள்பொடி சேர்த்துப் பொடி செய்யவும். இதை செய்து வைத்துக் கொண்டால் எல்லா ஊறுகாயிலும் சேர்க்கலாம். ஊறுகாய்க்கு நல்ல வாசனை தரும்.

நாரத்தங்காயை கொட்டை நீக்கி சிறு துண்டுகளாக்கவும்.

குக்கரில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் நாரத்தை துண்டுகள் சேர்த்து அதில் 1/4 ஸ்பூன் மஞ்சள்பொடி சேர்த்து வதக்கவும்.

குக்கரை மூடி ஒரு சத்தம் வந்ததும் இறக்கி, ஆறியதும் திறந்து இஞ்சியுடன் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு பெருங்காயப்பொடி சேர்த்து பொரிந்ததும், கடுகு சேர்த்து வெடிக்க விடவும்.

அதில் அரைத்த விழுது சேர்த்து, தேவையான உப்பு, காரப்பொடி சேர்த்து நன்கு கிளறவும்.

எண்ணை பிரியும்போது வெந்தய மஞ்சள்பொடி சேர்த்து நன்கு கலந்து இறக்கி ஜாடியில் எடுத்து வைக்கவும்.

சுவையான இந்த ஊறுகாய் தயிர்சாதம், சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ளலாம்.

Monday 15 April 2019

இஞ்சி குழம்பு

வயிற்று கோளாறுகளுக்கு இந்த் இஞ்சி குழம்பை வாரம் ஒருமுறை செய்து சாப்பிடலாம். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

துவரம் பருப்பு - 2 ஸ்பூன்
கடலை பருப்பு - 2 ஸ்பூன்
சாம்பார் பொடி - 2 ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 3
புளி - சிறிதளவு
பூண்டு - 20 பல்
இஞ்சி - 25 கிராம்
வறுத்து பொடித்த வெந்தயம் - 1 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிதளவு
பெருங்காயம் - சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
நல்லெண்ணெய் - 4 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
புளி - சிறிதளவு

செய்முறை :

* முதலில் இஞ்சி, பூண்டு, வெங்காயத்தை மிக்சியில் போட்டு நைசாக அரைக்கவும்.

* புளியை தேவையான தண்ணீர் ஊற்றி நன்றாக கரைத்து கொள்ளவும்.

* கடாயில் நல்லெண்ணெய் விட்டு, கடுகு, கடலை பருப்பு, துவரம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் அரைத்த விழுதை போட்டு வதக்கவும். நன்கு எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.

* அடுத்து அதில் மஞ்சள் தூள் சேர்க்கவும்.

* அடுத்து 1 டம்ளர் தண்ணீர், புளி கரைத்த தண்ணீர், சாம்பார் பொடி, பெருங்காய தூள், வறுத்த வெந்தய பொடி, உப்பு எல்லாம் சேர்க்கவும்.

* நன்கு கொதித்து கெட்டியாகி எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும்.

* நல்ல மணமுள்ள இஞ்சி குழம்பு தயார்.

* இந்த இஞ்சி குழம்பு வயிற்று உபாதைகளுக்கு மிகவும் நல்லது.

ரகடா பட்டீஸ்


ரகடாவிற்கு...
காய்ந்த பட்டாணி...1கப்
பெரியவெங்காயம்...1(பொடியாக நறுக்கவும்.)
தக்காளி...1(பொடியாக நறுக்கவும்)
பெருங்காயத்தூள்...1/4 டீஸ்பூன்
கடுகு...1டீஸ்பூன்
சீரகம்...1டீஸ்பூன்
இஞ்சி பச்சைமிளகாய் விழுது...2டீஸ்பூன்
மஞ்சள்பொடி...1டீஸ்பூன்
தனியாபொடி...1டீஸ்பூன்
காரப்பொடி ...3/4 டீஸ்பூன்
கரம்மசாலா...1/2 டீஸ்பூன்
வெல்லம்...சிறுதுண்டு
கறிவேப்பிலை...ஒருகொத்து
எண்ணை...4டீஸ்பூன்
எலுமிச்சைசாறு...2டீஸ்பூன்
உப்பு...தேவையான அளவு

பட்டாணியை இரவு தண்ணீரில் ஊற வைக்கவும்.

மறுநாள் குக்கரில் 5,6 சத்தம் வரும்வரை வேகவிடவும்.

வெளியில் எடுத்து மசித்து வைத்துக் கொள்ளவும்.

எண்ணெயைக் காயவைத்து அதில் பெருங்காயம், கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளிக்கவும்.

அதில் இஞ்சி பச்சைமிளகாய் விழுது வதக்கி, அதிலேயே நறுக்கிய தக்காளி, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

நன்கு வதக்கியதும் அதில் மஞ்சள்பொடி, தனியாபொடி, காரப்பொடி, கரம்மசாலா, சேர்த்து மேலும் சற்று வதக்கவும்.

அதில் வேகவிட்ட பட்டாணி,உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

வெல்லம் சேர்க்கவும்.
மேலே கொத்துமல்லி தூவி அலங்கரிக்கவும்.

ரகடா ரெடி!

பட்டீஸ் செய்ய..
--------------------------
உருளைக் கிழங்கு...4 (வேகவைத்து உரித்து நன்கு மசிக்கவும்)
கார்ன் ஃப்ளவர்...3டேபிள்ஸ்பூன்
காரப்பொடி...1டீஸ்பூன்
எண்ணை...4டீஸ்பூன்
உப்பு...தேவையான அளவு

உருளைக் கிழங்கை நன்கு வேகவிட்டு தோலி நீக்கி உரித்து நன்கு மசிக்கவும்.

அத்துடன் கார்ன் ஃப்ளவர், உப்பு, காரப்பொடி எண்ணை சேர்த்து தேவையான தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து மூடி வைக்கவும்.

1/2 மணி கழித்து நன்கு பிசைந்து எலுமிச்சை அளவு மாவு எடுத்து உள்ளங்கையில் வட்டமாக கனமாகத் தட்டவும்.

தோசைக்கல்லை காயவைத்து அதில் பட்டீசைப் போட்டு சுற்றிலும் எண்ணெய் விட்டு இரு பக்கமும் சிவக்க வேகவிடவும்.
பட்டீஸ் ரெடி!

இனிப்பு சட்னி
-----------------------
விதையில்லாத பேரீச்சை...10
புளி...எலுமிச்சை அளவு
வெல்லம்...1/4 கப்
காரப்பொடி...1/2டீஸ்பூன்
சீரகப்பொடி...1/2 டீஸ்பூன்
காலாநமக்(கருப்பு உப்பு)....1/4 டீஸ்பூன்
உப்பு...1டீஸ்பூன்
தண்ணீர்...1 1/2 கப்

புளியை ஒன்றரை கப் தண்ணீரில் ஊறவைத்து கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும்.

பேரீச்சையை 2 நிமிடம் நீரில் கொதிக்கவிட்டு அரைக்கவும்.

புளித்தண்ணீரை  கொதிக்கவிட்டு புளி வாசனை போய் சற்று கெட்டியானதும் அதில் அரைத்த பேரீச்சை விழுது, வெல்லம், சீரகப்பொடி, காரப்பொடி, காலாநமக்,உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

கெட்டியானதும் இறக்கி ஆறியதும் எடுத்து வைக்கவும்.
இனிப்பு சட்னி ரெடி!

க்ரீன் சட்னி
---------------------
கொத்துமல்லி...1/2 கப்
புதினா...1/4 கப்
நிலக்கடலை 2 டேபிள்ஸ்பூன்
பச்சைமிளகாய்...2
இஞ்சி... சிறு துண்டு
உப்பு...1/4 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு...3டீஸ்பூன்

கடலை,இஞ்சி,பச்சைமிளகாய்,,உப்பு சேர்த்து நைஸாக அரைக்கவும்.

அத்துடன் கொத்துமல்லி, புதினா,எலுமிச்சை சாறு சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.
க்ரீன் சட்னி ரெடி!

பூண்டு சட்னி
----------------------
பூண்டுபற்கள்...15
காரப்பொடி...2டீஸ்பூன்
சீரகம்...1டீஸ்பூன்
தனியா பொடி...1/2 டீஸ்பூன்
உப்பு....தேவையான அளவு

பூண்டு தோலி நீக்கி மற்ற சாமான்களுடன் சேர்த்து மிக்ஸியில் நீர் சேர்க்காமல் கெட்டியாக அரைக்கவும்.
பூண்டு சட்னி ரெடி!

ஓமப்பொடி
------------------
கடலை மாவு...1 1/2கப்
மிளகுபொடி...1/4 டீஸ்பூன்
பெருங்காயப்பொடி...சிறிது
காரப்பொடி...1/2 டீஸ்பூன்
மஞ்சள் பொடி...1/4 டீஸ்பூன்
நெய்...3டீஸ்பூன்
உப்பு...தேவையான அளவு

எல்லாம் சேர்த்து தேவையான நீர் சேர்த்து கெட்டியாகப் பிசையவும்
வாணலியில் எண்ணெய் சுட வைத்து தேங்குழல் படியில் மெல்லிய ஓமப்பொடி தட்டைப் போட்டு ஓமப்பொடிகளாகப் பிழியவும்.
ஓமப்பொடி ரெடி!

பரிமாற தேவை..
பொடியாக நறுக்கிய தக்காளி
பொடியாக நறுக்கிய வெங்காயம்
சேவ் எனப்படும் மெலிதான ஓமப்பொடி (கடைகளில் கிடைக்கும்.)
இனிப்பு சட்னி
க்ரீன் சட்னி
பூண்டு சட்னி
பொடியாக நறுக்கிய கொத்துமல்லி

பரிமாறும் முறை..
ரகடா, பட்டீஸ் இரண்டும் சூடாக இருந்தால் ருசி அருமையாக இருக்கும்.
ஒரு தட்டில் இரண்டு பட்டீசை வைத்து அது முழுகும் அளவு ரகடா சேர்க்கவும்.

மேலே எழுதியுள்ள முறைப்படி சட்னிகளைத் தயாரித்து  உங்கள் சுவைக்கேற்றபடி க்ரீன் சட்னி, இனிப்பு சட்னி, பூண்டு சட்னி சேர்க்கவும்.

அதன்மேல் நறுக்கிய தக்காளி, வெங்காயம் சேர்க்கவும்.
மேலே கொத்துமல்லி, ஓமப்பொடி தூவி பரிமாறவும்.

எல்லாவற்றையும் கலந்து சாப்பிடும்போது கிடைக்கும் ருசி மிக அருமையாக இருக்கும்.

பார்க்கும்போதே சாப்பிடத் தூண்டும் ரகடா பட்டீஸ் மும்பையின் பிரபலமான தெருக்கடை உணவு!