போகி முடிந்தது! அடுத்து பொங்கல் செய்வதைப் பார்ப்போம்!
எல்லாரும் செய்யும் பொதுவான சமையல் சர்க்கரைப் பொங்கலும், வடையும். சில வீடுகளில் வெண்பொங்கல்,அவிஸ் இவற்றையும் செய்வதுண்டு.
அவிஸ் என்பது அரிசியை வெறும் வாணலியில் சற்று பிரட்டி, அத்துடன் நீரும், பாலும் சேர்த்து குழைய வேகவிடவேண்டும். அத்துடன் சிறிது பொடித்தவெல்லம், இளம் தேங்காய், வாழைப்பழம்,நெய் சேர்த்து நிவேதித்து சாப்பிட வேண்டும்.
அவிஸ் என்பது அரிசியை வெறும் வாணலியில் சற்று பிரட்டி, அத்துடன் நீரும், பாலும் சேர்த்து குழைய வேகவிடவேண்டும். அத்துடன் சிறிது பொடித்தவெல்லம், இளம் தேங்காய், வாழைப்பழம்,நெய் சேர்த்து நிவேதித்து சாப்பிட வேண்டும்.
வெண் பொங்கல்
ஒரு கப் பச்சரிசியுடன் 1/4கப்
பயத்தம்பருப்பு சேர்த்து வெறும் வாணலியில் லேசாக வறுக்கவும். அத்துடன் 41/2
கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் 5,6 சத்தங்கள் வரும்வரை குழைய வேகவிடவும்.
குக்கரைத் திறந்து நன்கு கிளறி விடவும். தேவையான உப்பு, பெருங்காயப்பொடி
சேர்க்கவும். 4 டீஸ்பூன் நெய்யைக் காயவைத்து 12 முந்திரிபருப்பு, 10
காய்ந்த திராட்சை வறுத்துப் போடவும். மேலும் 2 டீஸ்பூன் நெய்யில் பொடியாக
நறுக்கிய இஞ்சி, முழுமிளகு 6, 1 டீஸ்பூன் ஜீரகம், ஒரு கொத்து கறிவேப்பிலை
தாளித்து பொங்கலில் கொட்டவும். பொங்கலை மேலும் சுவையாக்க, 1/2 டீஸ்பூன்
மிளகு, சீரகப்பொடி நெய்யில் தாளிக்கவும். பொங்கலில் எல்லாம்
சேர்ந்து கொள்ளும்படி நன்கு கிளறவும். பொங்கலின் மீது 2 டீஸ்பூன் நெய் விட்டு
சூடாகப் பரிமாறவும். சிறு துண்டு இஞ்சியை அரைத்துப் பொங்கலில் சேர்த்தால்
வாசனையாக இருக்கும். அரைத்துப் போட்டால் தாளிக்கும் இஞ்சித் துண்டுகளை
குறைத்துக் கொள்ளவும். கமகம வெண்பொங்கல் ரெடி!
சர்க்கரைப் பொங்கல்
தேவை
அரிசி-1 கப்
பயத்தம்பருப்பு -1/4 கப்
வெல்லம்-1கப்
கல்கண்டு-1/2கப்
பால்- 1 கப்
முந்திரி -,திராட்சை -15
நெய்-1/4கப்
ஏலக்காய்-8,ஜா
செய்முறை
அரிசி, பயத்தம்பருப்பை வெறும் வாணலியில் லேசாக
வறுக்கவும். பொங்கல் அன்று வெண்கலப் பானைக்கு சந்தனம், குங்குமம்
இட்டு, புது மஞ்சள் கொத்தை சுற்றி அதில்தான் பொங்கல் செய்வது வழக்கம். பாலுடன் 4 கப் தண்ணீர் சேர்த்து வைத்து,
கொதித்ததும், அரிசி, பருப்பைக் களைந்து போட்டு அடிக்கடி கிளறவும். பொங்கல்
பொங்கி வரும்போது 'பொங்கல் பொங்குவதுபோல வாழ்வில் எல்லா செல்வமும்
பொங்கிப் பெருக வேண்டும்' என்று இறைவனை வேண்டி 'பொங்கலோ பொங்கல்' என்று
கூவவேண்டும். பொங்கல் நன்கு குழைய வெந்ததும் அதில் பொடிசெய்த வெல்லம்
மற்றும் கல்கண்டு சேர்க்கவும். கரைந்து நன்கு சேர்ந்துகொண்டதும்
இறக்கவும். நெய்யில் முந்திரி,திராட்சை வறுத்துப் போடவும். ஜாதிக்காயை
நெய்யில் வறுத்து, ஏலக்காய், ப.கல்பூரம் சேர்த்துப் பொடி சேர்க்கவும். குங்குமப்பூவை சிறுதுளி பாலில் கரைத்து விடவும். மீதமுள்ள
நெய்யையும் பொங்கலில் சேர்த்து கலக்கவும். பொங்கல் இறக்கும்போது சற்று தளதளவென்று இருக்கும். ஆறியதும் சரியாகிவிடும்.
உளுந்து வடை
ஒரு கப் உளுத்தம்பருப்புடன், 2 டீஸ்பூன் அரிசி
சேர்த்து களைந்து 1/2 மணி நேரம் ஊறவைக்கவும். அத்துடன் 4 மிளகாய் வற்றல், 2
பச்சைமிளகாய், தேவையான உப்பு சேர்த்து அளவாக தண்ணீர் சேர்த்து
நைசாக, கெட்டியாக அரைக்கவும். அத்துடன் பெருங்காயப்பொடி, கறிவேப்பிலை
சேர்த்து கலந்து, வட்டமாகத் தட்டி நடுவில் விரலால் சிறிய துளை செய்து
எண்ணையைக் காயவைத்து வடைகளாகத் தட்டவும்.
எழுகறிக் குழம்பு
பொங்கல்
அன்று பல காய்கறிகளைச் சேர்த்து செய்யப்படும் வித்யாசமான குழம்பு இது.
ஏழு காய்கறிகள் சேர்ப்பது வழக்கம். அதனால் இப்பெயர். ஆனால் இதற்கு மேலும்
கூட்டியோ, அல்லது கிடைத்த காய்கறிகளைக் கொண்டும் இந்தக் குழம்பு செய்யலாம்.ஆனால் காய்கறிகள் எண்ணிக்கை ஒற்றைப் படையாக இருக்க வேண்டும்.
தேவை
காரட், உருளைக் கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, சேனைக் கிழங்கு, கருணைக் கிழங்கு, பூசணி, பரங்கி,வாழைக்காய் --- சற்று பெரிதாக நறுக்கிய துண்டங்கள்---- 2 -2 1/2கப்புகள்
மொச்சைக் கொட்டை, பட்டாணி ---- 1/4 கப்
அவரை, கொத்தவரை, பீன்ஸ் --- 1/4 இன்ச் நீள துண்டுகள்----தலா -- 1/2கப்
துவரம் பருப்பு--- 1/2 கப்
புளி---- 1 பெரிய எலுமிச்சை அளவு
எண்ணை--- 5 டேபிள் ஸ்பூன்
நெய்-2 டீஸ்பூன்
உப்பு--- தேவையான அளவு
வறுத்து அரைக்க
பெருங்காயம்--- 1 துண்டு
உளுத்தம்பருப்பு -2 தேக்கரண்டி
கடலைப் பருப்பு--- 4 தேக்கரண்டி
தனியா--- 6 தேக்கரண்டி
மிளகாய் வற்றல்--- 10 முதல் 15
துருவிய தேங்காய்--- 1/2 கப்
தாளிக்க
கடுகு--- 4 தேக்கரண்டி
பச்சை மிளகாய்--- 4
கறிவேப்பிலை
கொத்துமல்லி தழை
செய்முறை
துவரம் பருப்பை 11/2 கப் நீர் சேர்த்து குக்கரில் வேகவிடவும்.
3 டேபிள் ஸ்பூன் எண்ணையில் முறையே பெருங்காயம், உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு, தனியா, மிளகாய் வற்றல், தேங்காயைத் தனித் தனியே சிவக்க வறுத்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். புளியுடன் 4 கப் நீர் சேர்த்துக் கரைக்கவும்.. பூசணி, பரங்கி, வாழைக்காய் தவிர மற்ற காய்கறித் துண்டங்களை சிட்டிகை மஞ்சள்பொடி, உப்பு சேர்த்து நசுங்கும் பதத்திற்கு வேகவைத்து வடிகட்டவும்.
புளிக்கரைசலில் பூசணி, பரங்கி, வாழைக்காய் துண்டுகளைச் சேர்த்து கொதிக்கவிடவும். சற்று புளிவாசனை போனதும் பாதி வெந்த காய்கறிகள், தேவையான உப்பு சேர்த்துக் கொதிக்க வைக்கவும்.
நன்கு கொதித்து சேர்ந்து கொண்டதும், அதில் அரைத்த கலவை,வெந்த துவரம்பருப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
10 நிமிடம் கொதித்ததும் இறக்கி, 2 டேபிள்ஸ்பூன் எண்ணை மற்றும் நெய்யை சுடவைத்து கடுகு, வாய் கீறிய பச்சைமிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
இதில் சாம்பார்பொடி சேர்க்கக் கூடாது.விருப்பப் பட்டால் இதில் ஒரு சிறிய துண்டு வெல்லம் சேர்க்கலாம்.
மேலே கறிவேப்பிலை, கொத்துமல்லி தழை சேர்த்தால் மணக்கும் எழுகறிக் குழம்பு ரெடி!!
இனிப்பான சர்க்கரைப் பொங்கலுக்கு இந்த குழம்பு சூப்பர் மேட்ச்.
நிறைய காய்கறிகள் சேர்ப்பதால் குழம்பு அதிகமாக இருக்கும்.மிகுந்த குழம்பில் மறுநாள் சின்ன வெங்காயத்தை இரண்டாக நறுக்கி வதக்கி சேர்த்து கொதிக்கவிட்டு சாப்பிட மிக சுவையாக இருக்கும்.இதனை எரித்த குழம்பு என்று சொல்வதுண்டு.
கனு அன்று விடியற்காலை உடன்பிறந்த சகோதரர்களின் நலன் கருதி திறந்த வெளியில் கனுப்பிடி வைக்க வேண்டும். முதல் நாள் சாதத்தில் தயிர் விட்டு பிசைந்து, அதில் மஞ்சள்பொடி கலந்து வெள்ளை,மஞ்சள் வண்ண சாதங்களும், சர்க்கரைப் பொங்கல், குழம்பு, வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், கரும்புத் துண்டுகளை மஞ்சள் இலைகளில் ஒற்றைப் படை எண்ணிக்கையில் வரிசையாக வைத்து, நைவேத்தியம் செய்து, காக்கை கூட்டம், குருவிக் கூட்டம் போல சகோதரர்களின் குடும்பம் பெருகி, என்றும் ஒற்றுமையாக இருக்க வேண்டிக் கொள்ள வேண்டும். சிலர் குங்குமம் கலந்து சிவப்பு சாதமும் வைப்பார்கள்.கனுப்பிடி வைத்த பின்பே குளிக்க வேண்டும். அன்று எலுமிச்சை, தேங்காய், தயிர், புளி, வெல்ல சாதம், கல்கண்டு சாதம் போன்ற கலந்த சாத வகைகளை செய்ய வேண்டும்.
காரட், உருளைக் கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, சேனைக் கிழங்கு, கருணைக் கிழங்கு, பூசணி, பரங்கி,வாழைக்காய் --- சற்று பெரிதாக நறுக்கிய துண்டங்கள்---- 2 -2 1/2கப்புகள்
மொச்சைக் கொட்டை, பட்டாணி ---- 1/4 கப்
அவரை, கொத்தவரை, பீன்ஸ் --- 1/4 இன்ச் நீள துண்டுகள்----தலா -- 1/2கப்
துவரம் பருப்பு--- 1/2 கப்
புளி---- 1 பெரிய எலுமிச்சை அளவு
எண்ணை--- 5 டேபிள் ஸ்பூன்
நெய்-2 டீஸ்பூன்
உப்பு--- தேவையான அளவு
வறுத்து அரைக்க
பெருங்காயம்--- 1 துண்டு
உளுத்தம்பருப்பு -2 தேக்கரண்டி
கடலைப் பருப்பு--- 4 தேக்கரண்டி
தனியா--- 6 தேக்கரண்டி
மிளகாய் வற்றல்--- 10 முதல் 15
துருவிய தேங்காய்--- 1/2 கப்
தாளிக்க
கடுகு--- 4 தேக்கரண்டி
பச்சை மிளகாய்--- 4
கறிவேப்பிலை
கொத்துமல்லி தழை
செய்முறை
துவரம் பருப்பை 11/2 கப் நீர் சேர்த்து குக்கரில் வேகவிடவும்.
3 டேபிள் ஸ்பூன் எண்ணையில் முறையே பெருங்காயம், உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு, தனியா, மிளகாய் வற்றல், தேங்காயைத் தனித் தனியே சிவக்க வறுத்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். புளியுடன் 4 கப் நீர் சேர்த்துக் கரைக்கவும்.. பூசணி, பரங்கி, வாழைக்காய் தவிர மற்ற காய்கறித் துண்டங்களை சிட்டிகை மஞ்சள்பொடி, உப்பு சேர்த்து நசுங்கும் பதத்திற்கு வேகவைத்து வடிகட்டவும்.
புளிக்கரைசலில் பூசணி, பரங்கி, வாழைக்காய் துண்டுகளைச் சேர்த்து கொதிக்கவிடவும். சற்று புளிவாசனை போனதும் பாதி வெந்த காய்கறிகள், தேவையான உப்பு சேர்த்துக் கொதிக்க வைக்கவும்.
நன்கு கொதித்து சேர்ந்து கொண்டதும், அதில் அரைத்த கலவை,வெந்த துவரம்பருப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
10 நிமிடம் கொதித்ததும் இறக்கி, 2 டேபிள்ஸ்பூன் எண்ணை மற்றும் நெய்யை சுடவைத்து கடுகு, வாய் கீறிய பச்சைமிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
இதில் சாம்பார்பொடி சேர்க்கக் கூடாது.விருப்பப் பட்டால் இதில் ஒரு சிறிய துண்டு வெல்லம் சேர்க்கலாம்.
மேலே கறிவேப்பிலை, கொத்துமல்லி தழை சேர்த்தால் மணக்கும் எழுகறிக் குழம்பு ரெடி!!
இனிப்பான சர்க்கரைப் பொங்கலுக்கு இந்த குழம்பு சூப்பர் மேட்ச்.
நிறைய காய்கறிகள் சேர்ப்பதால் குழம்பு அதிகமாக இருக்கும்.மிகுந்த குழம்பில் மறுநாள் சின்ன வெங்காயத்தை இரண்டாக நறுக்கி வதக்கி சேர்த்து கொதிக்கவிட்டு சாப்பிட மிக சுவையாக இருக்கும்.இதனை எரித்த குழம்பு என்று சொல்வதுண்டு.
கனு அன்று விடியற்காலை உடன்பிறந்த சகோதரர்களின் நலன் கருதி திறந்த வெளியில் கனுப்பிடி வைக்க வேண்டும். முதல் நாள் சாதத்தில் தயிர் விட்டு பிசைந்து, அதில் மஞ்சள்பொடி கலந்து வெள்ளை,மஞ்சள் வண்ண சாதங்களும், சர்க்கரைப் பொங்கல், குழம்பு, வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், கரும்புத் துண்டுகளை மஞ்சள் இலைகளில் ஒற்றைப் படை எண்ணிக்கையில் வரிசையாக வைத்து, நைவேத்தியம் செய்து, காக்கை கூட்டம், குருவிக் கூட்டம் போல சகோதரர்களின் குடும்பம் பெருகி, என்றும் ஒற்றுமையாக இருக்க வேண்டிக் கொள்ள வேண்டும். சிலர் குங்குமம் கலந்து சிவப்பு சாதமும் வைப்பார்கள்.கனுப்பிடி வைத்த பின்பே குளிக்க வேண்டும். அன்று எலுமிச்சை, தேங்காய், தயிர், புளி, வெல்ல சாதம், கல்கண்டு சாதம் போன்ற கலந்த சாத வகைகளை செய்ய வேண்டும்.
புளியோதரை செய்ய நான் ஏற்கனவே கொடுத்த சமையல் குறிப்புப்படி புளிக் காய்ச்சல் செய்து, அத்துடன் சாதம் சேர்த்து பிசைய வேண்டும்.
எலுமிச்சை சாதம்...
சாதத்தை ஆறவைக்கவும். 3 டீஸ்பூன் நல்லெண்ணையைக் காயவைத்து அதில் பெருங்காயப்பொடி, கடுகு, பொட்டுக் கடலை, 2 நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளித்து சாதத்தில் கொட்டி, சிறிது மஞ்சள்பொடி, தேவையான உப்பு சேர்த்து, ஒரு எலுமிச்சம்பழம் பிழிந்து கலக்கவும்.
இதில் கடலை, முந்திரிபருப்பு வறுத்து சேர்க்கலாம்.
பச்சை பட்டாணியை வேகவைத்து சேர்க்கலாம். கேரட்டை துருவி மேலே போட்டு கலந்தால், வண்ணமயமான எலுமிச்சை சாதம் தயார்!
தேங்காய் சாதம் ...
2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய், 2 டீஸ்பூன் நெய்யைக் காயவைத்து அதில் பெருங்காயப்பொடி, கடுகு, உளுத்தம் பருப்பு, நிலக்கடலை, முந்திரிபருப்பு, நறு க்கிய
2 பச்சை மிளகாய், கிள்ளிய 2 மிளகாய் வற்றல், கறிவேப்பிலை தாளித்து அதிலேயே
துருவிய தேங்காய்(ஒரு மூடி)சேர்த்து சற்று சிவக்க வறுத்து அதை
சாதத்தில் கலக்கவும். இந்த சாதத்திலும் பச்சைப் பட்டாணி வேகவைத்து
சேர்க்கலாம்.
2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய், 2 டீஸ்பூன் நெய்யைக் காயவைத்து அதில் பெருங்காயப்பொடி, கடுகு, உளுத்தம்
கல்கண்டு சாதம்...
1 கப் அரிசியை 2 கப் பால், 2 கப் தண்ணீர் சேர்த்து நன்கு குழைய வேகவிடவும். அதில் 11/2 கப் பொடி செய்த கல்கண்டு சேர்த்து நன்கு கிளறவும். 5 ஸ்பூன் நெய்யில் முந்திரி, திராட்சை, பாதாம் துண்டுகளை வறுத்துப் போடவும். ஏலக்கய் பொடி, ஜாதிக்காய் பொடி சேர்க்கவும். குங்குமப்பூவை பாலில் கரைத்து விடவும். சுவையான கல்கண்டு சாதம் நாக்கில் கரையும்.
1 கப் அரிசியை 2 கப் பால், 2 கப் தண்ணீர் சேர்த்து நன்கு குழைய வேகவிடவும். அதில் 11/2 கப் பொடி செய்த கல்கண்டு சேர்த்து நன்கு கிளறவும். 5 ஸ்பூன் நெய்யில் முந்திரி, திராட்சை, பாதாம் துண்டுகளை வறுத்துப் போடவும். ஏலக்கய் பொடி, ஜாதிக்காய் பொடி சேர்க்கவும். குங்குமப்பூவை பாலில் கரைத்து விடவும். சுவையான கல்கண்டு சாதம் நாக்கில் கரையும்.
தயிர் சாதம்...
இதற்கும் சாதம் நல்ல குழைவாக வடிக்க வேண்டும்.2ஸ்பூன் நல்லெண்ணையில் பெ.பொடி, கடுகு, சீரகம், கடலைப்பரு ப்பு, நறுக்கிய
பச்சைமிளகாய், இஞ்சி, கிள்ளிய கறிவேப்பிலை சேர்த்து
தாளிக்கவும். கேரட், வெள்ளரிக்கையை நீளவாக்கில் சிறிதாக நறுக்கி
சேர்க்கவும்.பாலும், கெட்டித் தயிருமாகக் கலந்து விட்டுப் பிசையவும். 1 ஸ்பூன்
வெண்ணை சேர்த்தால் அருமையான தயிர் சாதம் ரெடி. இதில் பிடித்தவர்கள் மோர்
மிளகாயை வறுத்துப் போடலாம்.
அவியல்
தேவை
தயிர்--- 1 கப்
தேங்காய்த்துறுவல்-- 3/4 கப்
காய்கறிக்கலவை--- 2 1/2 கப்
(பீன்ஸ், காரட், வாழைக்காய், கத்தரிக்காய், பூசணிக்காய், முருங்கைக்காய், அவரைக்காய், கொத்தவரைக்காய், உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, புடலங்காய், பட்டாணி) இதில் விருப்பப்பட்ட காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம்.
பச்சை மிளகாய்-- 3 (அ) 4
உப்பு-- தேவையான அளவு
தேங்காய் எண்ணை--- 4 தேக்கரண்டி
கடுகு--- 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை--- 3 கொத்து
செய்முறை
பட்டாணி தவிர மற்ற காய்கறிகளை ஒரே அளவான சிறு துண்டுகளாக
நறுக்கிக் கொள்ளவும். தேவையான தண்ணீர், ஒரு தேக்கரண்டி உப்புசேர்த்து நன்கு வேகவிட்டு வடிகட்டவும்.
தேங்காயையும், பச்சை மிளகாயும் சிறிது தயிர் சேர்த்து மிக்ஸியில்நைஸாக அரைக்கவும்.
வெந்த காய்கறிகளுடன் அரைத்த தேங்காய் விழுது, தேவையான உப்புசேர்த்து நன்கு கலந்து கேஸில் வைத்துக் கொதிக்க விடவும்.
கீழே இறக்கி அதில் தயிர் சேர்த்து நன்கு கலக்கவும். தயிரை
கீழே இறக்கியபின்புதான் சேர்க்க வேண்டும்.
கொதிக்கும்போதுசேர்த்தால் நீர்த்துவிடும்.மேலே பச்சைத் தேங்காய் எண்ணை 2 தேக்கரண்டி ஊற்றி, மேலும் இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணையில் கடுகு தாளித்துக்கொட்டவும்.கறிவேப்பிலையை சேர்த்து அவியலை நன்கு கலக்கவும் .
காய்கறிகளை குக்கரிலும் வேக விடலாம். வெயிட்டைப் போட்டு 2சத்தம் விட்டால் போதும்.
இதற்கும் சாதம் நல்ல குழைவாக வடிக்க வேண்டும்.2ஸ்பூன் நல்லெண்ணையில் பெ.பொடி, கடுகு, சீரகம், கடலைப்பரு
அவியலோடு கலந்த சாதங்களுக்கு தொட்டுக் கொள்ள உருளைக் கிழங்கு ரோஸ்ட்,பொரித்த அப்பளம் நல்ல பொருத்தம்!
தேவை
தயிர்--- 1 கப்
தேங்காய்த்துறுவல்-- 3/4 கப்
காய்கறிக்கலவை--- 2 1/2 கப்
(பீன்ஸ், காரட், வாழைக்காய், கத்தரிக்காய், பூசணிக்காய், முருங்கைக்காய், அவரைக்காய், கொத்தவரைக்காய், உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, புடலங்காய், பட்டாணி) இதில் விருப்பப்பட்ட காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம்.
பச்சை மிளகாய்-- 3 (அ) 4
உப்பு-- தேவையான அளவு
தேங்காய் எண்ணை--- 4 தேக்கரண்டி
கடுகு--- 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை--- 3 கொத்து
செய்முறை
பட்டாணி தவிர மற்ற காய்கறிகளை ஒரே அளவான சிறு துண்டுகளாக
நறுக்கிக் கொள்ளவும். தேவையான தண்ணீர், ஒரு தேக்கரண்டி உப்புசேர்த்து நன்கு வேகவிட்டு வடிகட்டவும்.
தேங்காயையும், பச்சை மிளகாயும் சிறிது தயிர் சேர்த்து மிக்ஸியில்நைஸாக அரைக்கவும்.
வெந்த காய்கறிகளுடன் அரைத்த தேங்காய் விழுது, தேவையான உப்புசேர்த்து நன்கு கலந்து கேஸில் வைத்துக் கொதிக்க விடவும்.
கீழே இறக்கி அதில் தயிர் சேர்த்து நன்கு கலக்கவும். தயிரை
கீழே இறக்கியபின்புதான் சேர்க்க வேண்டும்.
கொதிக்கும்போதுசேர்த்தால் நீர்த்துவிடும்.மேலே பச்சைத் தேங்காய் எண்ணை 2 தேக்கரண்டி ஊற்றி, மேலும் இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணையில் கடுகு தாளித்துக்கொட்டவும்.கறிவேப்பிலையை சேர்த்து அவியலை நன்கு கலக்கவும் .
காய்கறிகளை குக்கரிலும் வேக விடலாம். வெயிட்டைப் போட்டு 2சத்தம் விட்டால் போதும்.
No comments:
Post a Comment