கோதுமை மாவு--- 2 கப்
பனீர்-- 200 கிராம்
பெரிய வெங்காயம்-- 2
சீரகம்-- 2 தேக்கரண்டி
மஞ்சள்பொடி-- 1 தேக்கரண்டி
காரப்பொடி-- 2 தேக்கரண்டி
கரம்மசாலா-- 1 1/2 தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை
எண்ணை-- தேவையான அளவு
உப்பு-- தேவையான அளவு
செய்முறை
கோதுமை மாவை  எண்ணை,  தண்ணீர்  சேர்த்து  சப்பாத்திக்கு  பிசைவது போல் கெட்டியாகப்  பிசைந்து  வைக்கவும்.
பனீரை காரட் துறுவியில் துறுவவும்.
சிறிதளவு எண்ணையில் சீரகம் போட்டு தாளித்து அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். அதில் மஞ்சள் பொடி, காரப்பொடி, கரம் மசாலா சேர்த்து கலந்து அடுப்பிலிருந்து இறக்கவும்.
அதில் துருவிய பனீர், தேவையான உப்பு, கொத்தமல்லி தழை சேர்த்து நன்கு கலந்து சிறு உருண்டைகளாக்கவும்.
பிசைந்த  மாவை  எலுமிச்சை  அளவு  எடுத்து,  அதை ஒரு  சிறிய  பூரி அளவு  இட்டு,  அதில்  பனீர்  பூரணம்  வைத்து  கனமான  பராத்தாகளாக இடவும்.
தவ்வாவில் 1 தேக்கரண்டி எண்ணை விட்டு, அதில் பராத்தாவைப் போட்டு, வெந்ததும் திருப்பிப் போட்டு மேலும் 1 தேக்கரண்டி எண்ணை விடவும்.
நன்கு  வெந்ததும் எடுக்கவும். மேலே  சிறிது  வெண்ணை  தடவி ஊறுகாய், தயிருடன் பரிமாறவும்.
பராத்தாக்களுக்கு ராய்த்தாவைவிடவெறும் தயிர்தான் தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும்.




