Wednesday 28 October 2020

கடாரங்காய் ஊறுகாய்

 

காயை சிறு துண்டுகளாக்கவும். தேவையான உப்பு ம.பொடி சேர்த்து தேவையான எண்ணையில் பெ.காயம் கடுகு தாளித்து அடுப்பில் வைத்து கொதிக்கும் வெந்நீரை விட்டு கொதிக்க விடவும். நீர் வற்றி எண்ணை பிரிந்ததும் தேவையான காரப்பொடி சேர்த்து நன்கு கிளறி பரிமாறவும்

Sunday 2 August 2020

30 வகை முறுக்கு


✸அவல் முறுக்கு

தேவையானவை:
அவல் – 2 கப், கோதுமை மாவு (அ) மைதா மாவு – கால் கப், கெட்டியான மோர் – 2 கப்,
உப்பு, எள், எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:
அவலை நன்றாகக் கழுவி மோருடன் கலந்து முதல் நாள் இரவே ஊற வைக்கவும். மறுநாள் எடுத்து
உப்பு சேர்த்து முறுக்கு பிழியும் அளவுக்கு கெட்டியாக அரைத்து, கோதுமை மாவு, எள்ளை சேர்க்கவும். அதை
முறுக்கு அச்சில் போட்டு, ஒரு துணியில் பிழியவும். இரண்டு அல்லது மூன்று முறை திருப்பிப் போடவும். ஈரம்
சிறிது காய்ந்ததும் எண்ணெயில் பொரித்து எடுக்கவும்

 ✸வெண்ணெய் முறுக்கு

தேவையானவை:
 கடலை மாவு, மைதா மாவு, அரிசி மாவு – தலா ஒன்றேகால் கப், சோடா உப்பு – 2 சிட்டிகை,
வெண்ணெய் – அரை கப், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:
 கடலை மாவு, மைதா மாவு, அரிசி மாவு மூன் றையும் சுத்தம் செய்து உப்பு, வெண்ணெய், சோடா
உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசையவும்.
பிசைந்த மாவை முறுக்கு அச்சில் போட்டு, காய்ந்த எண்ணெயில் பிழிந்து, வெந்ததும் எடுக்கவும்.

✸ கோயில் முறுக்கு

தேவையானவை:
 இடித்த பச்சரிசி மாவு – 4 கப், வெண்ணெய் – கால் கப், பொட்டுக்கடலை மாவு – 4 டீஸ்பூன்,
சீரகம் – ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள் – தலா கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் –
தேவையான அளவு.

செய்முறை:
பச்சரிசி மாவு, வெண்ணெய், பொட்டுக்கடலை மாவு, பெருங்காயத்தூள், உப்பு, சீரகம், மிளகாய்த்தூள்
எல்லாவற்றையும் ஒன்றாக ஒரு பாத்திரத்தில் போட்டு முறுக்கு மாவு பதத்துக்கு தண்ணீர் சேர்த்துப் பிசையவும்.
அந்த மாவில் சிறிது எடுத்து, 3 அங்குல நீளத்துக்கு உருட்டி, இரண்டு முனைகளையும் இணைக்கவும். இதே
போல் எல்லா மாவையும் உருட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
மாவை உருட்டி வெகு நேரம் வைத்திருந்தால் காய்ந்து உடைந்து விடும். அதனால், சிறிது ஈரப்பசை
இருக்கும்போதே பொரித்தெடுக்க- வேண்டும்

 ✸மைதா முறுக்கு

தேவையானவை:
மைதா மாவு – 2 கப், உளுந்து பொடி – 2 டேபிள்ஸ்பூன், வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்,
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:
மைதா மாவை வெள்ளைத் துணியில் சுற்றி, ஆவியில் வைத்து எடுத்து உளுந்து பொடி,
வெண்ணெய், உப்பு சேர்த்து பிசையவும். பிசைந்த மாவை பெரிய கண் உள்ள முறுக்கு அச்சில் போட்டு, காய்ந்த
எண்ணெயில் பிழிந்து பொரித்து எடுக்கவும்.
கோதுமை மாவு முறுக்கு

தேவையானவை:
 கோதுமை மாவு – ஒரு கப், அரிசி மாவு – அரை கப், சீரகம் – கால் டீஸ்பூன், வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:
 கோதுமை மாவையும் அரிசி மாவையும் ஒரு பாத்திரத்தில் போட்டு உப்பு, சீரகம், வெண்ணெய்,
பெருங்காயத்-தூள், தேவையான தண்ணீர் விட்டு முறுக்கு மாவு பதத்துக்குப் பிசைந்து கொள்ளவும்.
பிசைந்த மாவை, முறுக்கு அச்சில் போட்டு, காய்ந்த எண்ணெயில் பிழியவும். பொன்னிறமாக வெந்தவுடன்
வடித்-தெடுக்கவும்.

✸ மரவள்ளிங்கிழங்கு முறுக்கு

தேவையானவை:
மரவள்ளிக்கிழங்கு மாவு – ஒரு கப், அரிசி மாவு, கடலை மாவு – தலா கால் கப்,
மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் – சிறிதளவு, எள் – 2 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் –
தேவையான அளவு.

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் எல்லா மாவுகளையும் போட்டு எள், மிளகாய்த்தூளை சேர்க்கவும். உப்பு,
பெருங்காயத்தை சிறிது தண்ணீரில் கரைத்து மாவு கலவையில் ஊற்றி, முறுக்கு மாவு பதத்தில் பிசைந்து
கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசைந்த மாவை முறுக்கு குழாயில் போட்டு பிழிந்து, பொன்னிறமாக
பொரித்து எடுக்கவும். எள்ளுக்குப் பதில் ஓமம் சேர்த்தும் செய்யலாம்.
மரவள்ளிக்கிழங்கு மாவு கிடைக்கவில்லை என்றால் மரவள்ளிக்-கிழங்கை வேக வைத்து தோலுரித்து, முறுக்கு
மாவு பதத்தில் கெட்டியாக அரைத்துக் கொள்ளலாம்.

 ✸இனிப்பு முறுக்கு

தேவையானவை:
உளுந்து – ஒரு கப், மாவு அரிசி – அரை கப், எண்ணெய் – தேவையான அளவு, வெல்லம் – ஒரு கப்

செய்முறை:
உளுந்து, அரிசி இரண்டையும் அரை மணி நேரம் ஊற வைத்து சிறிது தண்ணீர், உப்பு சேர்த்து
கெட்டியாக அரைத்தெடுக்கவும்.

அரைத்த மாவை முறுக்கு அச்சில் போட்டு காய்ந்த எண்ணெயில் பிழியவும். இருபுறமும் வெந்ததும் எடுத்து ஆற விடவும்.
வெல்லத்தைப் பொடித்து, சிறிது தண்ணீரில் கரைத்து வடிகட்டவும். அதை ஒரு அகன்ற பாத்திரத்தில் ஊற்றி,
அடுப்பில் வைத்து பாகு உருட்டும் பதத்தில் காய்ச்சவும். அதை பொரித்து வைத்துள்ள முறுக்குகளின் மேல்
ஊற்றிக் கிளறவும்.
இது, ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.

 ✸ரவா தேன் குழல்

தேவையானவை:
ரவை – ஒரு கப், தேங்காய் துருவல் – அரை கப், கோதுமை மாவு – 2 டேபிள்ஸ்பூன், மிளகு,
சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் – சிறிதளவு, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:
ஒரு கப் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் ரவை, தேங்காய் துருவல், உப்பு சேர்த்து கிளறி
இறக்கவும். பிறகு கோதுமை மாவு, மிளகு, சீரகத்தை பொடி செய்து சேர்த்துப் பிசையவும். வாசனைக்காக சிறிது
தேங்காய் எண்ணெயைச் சேர்க்கவும்.
பிசைந்த மாவை தேன்குழல் அச்சில் போட்டு, எண்ணெய் காய்ந்ததும் பிழியவும். நன்றாக வேகவிட்டு எடுக்கவும்.

✸ முள் முறுக்கு

தேவையானவை: அரிசி – 3 கப், கடலைப்பருப்பு – ஒரு கப், பயத்தம்பருப்பு – கால் கப், எள் (தேய்த்து
காய்ந்தது), சீரகம், கட்டிப் பெருங்காயம் – சிறிதளவு, வெண்ணெய் – சிறிய எலுமிச்சம்பழம் அளவு, உப்பு,
எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:
 அரிசி, கடலைப்பருப்பு, பயத்தம்பருப்பு மூன்றையும் மிஷினில் மாவாக அரைத்துக் கொள்ளவும்.
இந்த மாவுடன் உப்பு, பெருங்காயத்தை சிறிது தண்ணீரில் கரைத்து ஊற்றவும். பிறகு, வெண்ணெய், எள், சீரகம்
சேர்த்து தேவையான தண்ணீர் ஊற்றி முறுக்கு மாவு பதத்துக்குப் பிசையவும்.
முறுக்கு அச்சில் முள் முறுக்கு அச்சை வைத்து, அதில் மாவைப் போட்டு காய்ந்த எண்ணெயில் பிழியவும்.
பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.

 ✸பயத்தம்பருப்பு முறுக்கு

தேவையானவை:
பச்சரிசி – 4 கப், பயத்தம்பருப்பு – ஒரு கப், வெண்ணெய் – சிறிய எலுமிச்சம்பழம் அளவு, எள்,
சீரகம், பெருங்காயம் – சிறிதளவு, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:
அரிசி, பயத்தம்பருப்பை மிஷினில் அரைத்துக் கொள்ளவும். இதனுடன் எள், சீரகம், வெண்ணெய்,
பெருங்காயம், உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு முறுக்கு மாவு பதத்தில் பிசையவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பிசைந்து வைத்திருக்கும் மாவை முறுக்கு அச்சில் போட்டு எண்ணெயில்
பிழிந்து வேகவிட்டு எடுக்கவும்.

✸ மெட்டி முறுக்கு

தேவையானவை:
 அரிசி மாவு – 2 கப், மைதா மாவு – அரை கப், காய்ந்த மிளகாய், சீரகம், எண்ணெய் –
தேவையான அளவு, சன்ன ரவை – ஒரு டேபிள்ஸ்பூன், வெண்ணெய் – பெரிய எலுமிச்சம்பழம் அளவு, தேங்காய்
துருவல் – அரை கப், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:
தேங்காய் துருவலுடன் 2 மிளகாயை வைத்து சற்று கரகரப்பாக அரைத்து எடுக்கவும். ஒரு
பாத்திரத்தில் அரிசி மாவு, மைதா மாவு, சன்ன ரவை, சீரகம், வெண்ணெய், உப்பு போடவும். அதில் அரைத்த
விழுதை சேர்த்து, தேவையான தண்ணீர் ஊற்றி கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.
பிசைந்த மாவில் சிறிது எடுத்து, நீளமாக உருட்டி, பின் மெட்டியைப் போல இரண்டு சுற்று சுற்றி காய்ந்த
எண்ணெயில் போட்டு வேகவிட்டு எடுக்கவும்.

 ✸புரொட்டீன் முறுக்கு

தேவையானவை:
 பயத்தம் பருப்பு – ஒரு கப், பச்சை பட்டாணி – அரை கப், வறுத்து அரைத்த உளுந்து மாவு –
கால் கப், பச்சரிசி மாவு – 4 கப், எள் – ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:
பயத்தம்பருப்பை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் விட்டு வேக வைத்து ஆற விடவும். பச்சை
பட்டாணியை மிக்ஸியில் கெட்டியாக அரைக்கவும். வேக வைத்த பருப்பு, பட்டாணி விழுது, அரிசி மாவு, உளுந்து
மாவு, எள், உப்பு, மிளகாய்த்தூள் எல்லாவற்றையும் கெட்டியாகப் பிசையவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், முறுக்கு அச்சில் மாவை நிரப்பி எண்ணெயில் பிழிந்து வேக விட்டு
எடுக்கவும். காய்ந்த பட்டாணியாக இருந்தால் முந்தைய நாள் இரவே ஊற வைத்து அரைக்க வேண்டும்.

 ✸புழுங்கலரிசி முறுக்கு

தேவையானவை:
புழுங்கலரிசி – 4 கப், பொட்டுக்கடலை மாவு – ஒரு கப், சீரகம் – அரை டீஸ்பூன், எள் – 2 டீஸ்பூன்
 வெண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன், ஊற வைத்த பாசிப்பருப்பு – ஒரு கைப்பிடி, மிளகு – அரை டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:
புழுங்கலரிசியை 2 மணி நேரம் ஊற வைத்து கிரைண்டரில் நைஸாக அரைக்கவும். அதில்
பொட்டுக்கடலை மாவு, சீரகம், மிளகுத்தூள், எள், ஊற வைத்த பாசிப்பருப்பு, வெண்ணெய், உப்பு சேர்த்து பிசையவும்
வெள்ளை துணியின் மீது ஒரு டம்ளரை கவிழ்த்து, பிசைந்து வைத்துள்ள மாவில் சிறிது எடுத்து, டம்ளரை சுற்றி
கையினால் முறுக்கு சுற்ற வேண்டும். சுற்றிய முறுக்குகள் ஈரம் காய்ந்ததும் எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
சீரகம், மிளகுத்தூளுக்கு பதிலாக மிளகாய்த்தூள் சேர்த்தும் செய்யலாம்.

 ✸பச்சரிசி கார முறுக்கு

தேவையானவை:
பச்சரிசி மாவு – 4 கப், பொட்டுக்கடலை மாவு – ஒரு கப், உப்பு, மிளகாய்த்தூள், தண்ணீர்,
எண்ணெய் – தேவையான அளவு, பெருங்காயத்தூள் – சிறிதளவு.

செய்முறை:
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து 4 கப் தண்ணீர் ஊற்றவும். அதில் உப்பு போட்டு, மெதுவாக
கொதிக்க ஆரம்பிக்கும்போது அரிசி மாவை கொட்டி, அடுப்பிலேயே வைத்துக் கிளறி, பின்னர் அடுப்பை
அணைத்து விடவும்.
இந்த மாவை தட்டில் போட்டு பிசைந்து, சூடு ஆறியதும் பொட்டுக்கடலை மாவு, மிளகாய்த்தூள் சேர்த்துப்
பிசையவும்.இந்த மாவை முறுக்கு அச்சில் போட்டு, காய்ந்த எண்ணெயில் பிழிந்து சுட்டெடுக்கவும்.

 ✸ஸ்பெஷல் தூள் முறுக்கு

தேவையானவை:
அரிசி மாவு, கடலை மாவு, பொட்டுக்கடலை மாவு – தலா ஒரு கப், சீரகம் – சிறிதளவு,
காய்ச்சிய எண்ணெய் – அரை கரண்டி, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, கடலை மாவு, பொட்டுக்கடலை மாவு, உப்பு, சீரகம் போட்டு
காய்ச்சிய எண்ணெயை ஊற்றி கலக்கவும்.
கலவையை உதிரியாக பிசைந்து, அடிக்கடி தண்ணீர் சேர்த்து நன்றாக பிசையவும். பிறகு அந்த மாவை
முறுக்கு அச்சில் போட்டு, காய்ந்த எண்ணெயில் பிழிந்து, வெந்ததும் எடுக்கவும். இது தூள் முறுக்காக வரும்.

 ✸தயிர் முறுக்கு

தேவையானவை:
அரிசி – 3 கப், உளுத்தம்பருப்பு – அரை கப், உப்பு போட்டு அரைத்த பச்சைமிளகாய் விழுது –
கால் கப், நெய் – ஒரு டேபிள்ஸ்பூன், புளித்த தயிர் – அரை கப், எள் – சிறிதளவு, எண்ணெய் – தேவையான
அளவு.

செய்முறை:
அரிசி, உளுத்தம்பருப்பு இரண்டையும் மிஷினில் நைஸாக அரைத்துக் கொள்ளவும். இந்த மாவுடன்
பச்சைமிளகாய் விழுது, நெய், எள், புளித்த தயிரை சேர்த்துப் பிசையவும்.
தேவையானால் சிறிது தண்ணீர் ஊற்றி பிசைந்து, தேன்குழல் அச்சில் போட்டு, எண்ணெயில் பிழியவும்.
பொன்னிறமானதும் எடுக்கவும்.

 ✸பச்சைப்பயறு முறுக்கு

தேவையானவை:
அரிசி மாவு – 2 கப், முளைவிட்ட பச்சைப் பயறு – அரை கப், மிளகாய்த்தூள்- ஒரு டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், வெண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான
அளவு, ஓமம் – சிறிதளவு.

செய்முறை:
முளைவிட்ட பச்சைப்பயறை குக்கரில் வேக வைத்து, ஆறியதும் மிக்ஸியில் நைஸாக அரைத்துக்
கொள்ளவும். இந்த விழுதுடன் அரிசி மாவு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், வெண்ணெய், உப்பு சேர்த்து பிசையவும்.
முறுக்கு குழலில் நட்சத்திர அச்சைப் போட்டு, பிசைந்த மாவை அதில் போட்டு சின்ன முறுக்குகளாகப் பிழியவும். வெந்ததும் எடுக்கவும்

 ✸சோயா தேன்குழல்

தேவையானவை: சோயா மாவு – 4 கப், அரிசி மாவு – ஒரு கப், வறுத்துப் பொடித்த உளுந்து மாவு – ஒரு
டேபிள்ஸ்பூன், நெய் – கால் கப், சீரகம் – 2 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:
நெய்யை சூடாக்கிக் கொள்ளவும். சோயா மாவு, அரிசி மாவு, உளுந்து மாவு, உப்பு, சீரகம், நெய்
எல்லாவற்றையும் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி முறுக்கு மாவு பதத்துக்கு பிசைந்து கொள்ளவும். மாவில்
சிறிதளவு சூடான எண்ணெயை ஊற்றிப் பிசையவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசைந்த மாவை முறுக்கு அச்சில் போட்டு பிழியவும். பொன்னிறமாக
வெந்ததும் எடுக்கவும்.

 ✸சோயா முள் முறுக்கு

தேவையானவை:
 பொட்டுக்கடலை மாவு, சோயா மாவு, அரிசி மாவு – தலா ஒரு கப், சீரகம் – 2 டீஸ்பூன், நெய்
- ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் பொட்டுக்கடலை மாவு, சோயா மாவு, அரிசி மாவு, சீரகம், உப்பு போட்டு நன்றாக
கலந்து கொள்ளவும். அதில் நெய்யை போட்டுப் பிசறி, சிறிது தண்ணீர் தெளித்து நன்றாக பிசையவும்.
முறுக்குக் குழாயில் முள்ளு முறுக்கு அச்சைப் போட்டு, அதில் மாவை நிரப்பி எண்ணெயில் பிழிந்து பொரித்து
எடுக்கவும்.

 ✸சோயா ரிப்பன் முறுக்கு

தேவையானவை:
 சோயா மாவு – ஒரு கப், கடலை மாவு, அரிசி மாவு – தலா அரை கப், எள், நெய் – தலா ஒரு
டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:
எல்லா மாவுகளையும் சலித்து ஒரு பாத்திரத்தில் போட்டு, நெய்யை சூடாக்கி ஊற்றவும். அதில் எள்,
உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டுப் பிசைந்து கொள்ளவும்.
முறுக்குக் குழாயில் ரிப்பன் அச்சைப் போட்டு அதில் மாவை நிரப்பி, காய்ந்த எண்ணெயில் பிழியவும். நன்றாக
வெந்ததும் எடுக்கவும்.

 ✸திடீர் முறுக்கு

தேவையானவை:
 உளுத்தம்பருப்பு – அரை கப், அரிசி மாவு – இரண்டரை கப் (அரிசி, உளுந்து 5:1 என்ற
விகிதத்தில் இருக்க வேண்டும்), சீரகம் – 2 டீஸ்பூன், வெண்ணெய் – 2 டீஸ்பூன், காய்ச்சிய எண்ணெய் – அரை
டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: உளுத்தம்பருப்பை கழுவி, மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி குக்கரில் வேக வைக்கவும். மூன்று
முறை விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும். ஆறிய பிறகு மிக்ஸியில் போட்டு நன்றாக வெண்ணெய்போல் அரைக்கவும்
அரிசி மாவில் வெண்ணெய், உப்பு, காய்ச்சிய எண்ணெய், சீரகம் சேர்த்து நன்றாக பிசறவும். பிறகு அதில்
அரைத்த உளுந்து மாவை சேர்க்கவும். தேவையானால் சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து முறுக்கு மாவு
பதத்துக்குப் பிசையவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்தவுடன் முறுக்கு அச்சில் மாவைப் போட்டு பிழியவும். இது, வெள்ளையாக
இருக்கும். சீரகத்துக்கு பதிலாக எள் சேர்த்தும் செய்யலா

 ✸உருளைக்கிழங்கு தேன்குழல்

தேவையானவை:
உருளைக்கிழங்கு – கால் கிலோ, வறுத்த உளுந்து மாவு – ஒரு டீஸ்பூன், வெண்ணெய் – 2
டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:
 உருளைக்கிழங்கை வேக வைத்து, தோல் உரித்துக் கொள்ளவும். அதை மிக்ஸியில் கெட்டியாக
அரைக்கவும். அதோடு உளுந்து மாவு, உப்பு, வெண்ணெய் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தேன்குழல் அச்சில் மாவைப் போட்டு எண்ணெயில் பிழியவும்.
சிவந்தவுடன் எடுக்கவும்.

 ✸வாழைக்காய் தேன்குழல்

தேவையானவை: வாழைக்காய் – 2, வறுத்த உளுந்து மாவு – 2 டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் – சிறிதளவு,
வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:
வாழைக்காயை வேக வைத்து, தோல் உரித்து மிக்ஸியில் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
அதனுடன் உளுந்துமாவு, பெருங்காயத்தூள், உப்பு, வெண்ணெய் சேர்த்து முறுக்கு பதத்துக்கு பிசைந்து
கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் தேன் குழல் அச்சில் மாவைப் போட்டு எண்ணெயில் பிழியவும்.
சிவந்ததும் எடுக்கவும்.

 ✸கருப்பட்டி முறுக்கு

தேவையானவை:
பச்சரிசி மாவு – 5 கப், வறுத்த உளுந்து மாவு – ஒன்றரை கப், எள் – 2 டேபிள்ஸ்பூன், நெய் –
2 டேபிள்ஸ்பூன், கருப்பட்டி – 2 கப், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மாவு, வறுத்த உளுந்து மாவு, எள், உப்பு, நெய் ஆகியவற்றைப் போட்டு
கலந்து கொள்ளவும். கருப்பட்டியை தூள் செய்து தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
அதில் மாவு கலவையை கொட்டிக் கிளறவும். ஆறிய பிறகு நன்றாகப் பிசையவும். கடாயில் எண்ணெய் ஊற்றி
காய்ந்ததும், மாவை முறுக்குக் குழலில் போட்டு எண்ணெயில் பிழியவும். வெந்தவுடன் எடுக்கவும்.

 ✸பச்சரிசி ஜீரா முறுக்கு

தேவையானவை: பச்சரிசி – இரண்டரை கப், சர்க்கரை – 5 கப், உளுத்தம்பருப்பு – ஒரு கப், வெண்ணெய் – 2
டேபிள்ஸ்பூன், எள்- ஒன்றரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:
பச்சரிசியை தண்ணீரில் ஊற வைத்து கழுவி, நீரை வடித்து இடித்து சலித்துக் கொள்ளவும்.
உளுத்தம்பருப்பை வறுத்து ஆறிய பிறகு நைஸாக அரைத்துக் கொள்ளவும். இரண்டு மாவையும் ஒன்றாகக்
கலந்து, உப்பு, எள், வெண்ணெய், தண்ணீர் சேர்த்து, கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், முறுக்குக் குழாயில் மாவைப் போட்டு எண்ணெயில் பிழிந்து
வெந்தவுடன் எடுக்கவும்.
சர்க்கரையை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் சேர்த்து, 2 கம்பி பாகு பதத்தில் முற்றிய பாகு காய்ச்சவும்.
முறுக்கை ஓடித்து ஜீராவில் கொட்டி நன்றாகக் கிளறி விடவும். இளஞ்சூடாக இருக்கும்போதே உருண்டையாகப்
பிடிக்கலாம். அல்லது உதிர்த்து விட்டு உதிராகவும் வைக்கலாம்.

 ✸ வளைய முறுக்கு

தேவையானவை:
 பாசிப்பருப்பு – அரை கப், மைதா மாவு – 2 டேபிள்ஸ்பூன், அரிசி மாவு – 2 கப்,
மிளகாய்த்தூள் – 2 டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:
பாசிப்பருப்பை வேக வைத்துக் கொள்ளவும். அரிசி மாவை கடாயில் போட்டு சிறிது சிவக்க
வறுக்கவும். அதில் உப்பு, மிளகாய்த்தூள், வெந்த பாசிப்பருப்பு சேர்த்து வேக விடவும். இந்தக் கலவை கெட்டியாக
வந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கவும்.
அதில் மைதா மாவை சேர்த்துப் பிசைந்து சிறு வளையங்களாக செய்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி

காய்ந்ததும், வளையங்களை அதில் போட்டு சிவந்து வந்தவுடன் எடுக்கவும்.

 ✸தேங்காய்ப்பால் முறுக்கு

தேவையானவை:
அரிசி மாவு – 2 கப், உளுத்தம்பருப்பு மாவு – 2 கப், வெண்ணெய் – 2 டீஸ்பூன்,
தேங்காய்ப்பால் – ஒரு கப், சீரகம், மிளகு – தலா அரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:
உளுத்தம்பருப்பை வெறும் கடாயில் வறுத்து மாவாக பொடிக்கவும். இதனுடன் அரிசி மாவு,
தேங்காய்ப்பால், உப்பு, பொடித்த மிளகு, சீரகம், வெண்ணெய் சேர்த்துப் பிசையவும்.
முறுக்கு அச்சில் மாவைப் போட்டு ஈரத்துணி மீது அல்லது பாலித்தீன் ஷீட்டில் சிறு சிறு முறுக்குகளாகப்
பிழியவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், முறுக்குகளை போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

தேங்காய் எண்ணெயில் பொரித்தால் சுவையும் மணமும் அமோகமாக இருக்கும்.

 ✸மனோகரம்

தேவையானவை:
பாசிப்பருப்பு – ஒரு கப்,
 பச்சரிசி – 2 கப், உப்பு – அரை டீஸ்பூன், பல்லு பல்லாக நறுக்கிய
தேங்காய் – அரை கப், பொடித்த வெல்லம் – ஒரு கப், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, நெய் – 2 டீஸ்பூன்,
எண்ணெய் – தேவையான அளவு,

செய்முறை:
 அரிசி, பருப்பை நைஸாக அரைத்து, உப்பு, தண்ணீர், நெய் சேர்த்து நன்றாகப் பிசையவும். கடாயில்

எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தேன்குழல் அச்சில் மாவைப் போட்டு பிழிந்து வேகவிட்டு எடுக்கவும்.

வெல்லத்தை உருட்டும் பதத்தில் காய்ச்சவும். நொறுக்கி வைத்துள்ள தேன்குழலில் ஏலக்காய்த்தூள்,

தேங்காய்ப்பால் சேர்த்து, பாகை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றிக் கிளறவும். பாகு நன்றாக கலந்தவுடன்

உருண்டையாகப் பிடிக்கலாம். இளம் சூடாக இருக்கும் போது தனித்தனியாக உதிர்த்தும் வைத்துக் கொள்ளலாம்.

 ✸நெய் முறுக்கு

தேவையானவை: பச்சரிசி மாவு – ஒரு கப், கடலை மாவு – கால் கப், ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன்,
வெண்ணெய் – நெல்லிக்காய் அளவு, நெய் – 4 டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:
 பச்சரிசியை ஊற வைத்து இடித்து, சலித்து, காய வைத்துக் கொள்ளவும். இந்த மாவுடன் கடலை

மாவு, உப்பு வெண்ணெய், நெய், ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். அதில் தேவையான தண்ணீர் ஊற்றி முறுக்கு மாவு
பதத்துக்குப் பிசையவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி, அதனுடன் வாசனைக்கு சிறிது நெய்யும் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும், முள்

முறுக்கு அச்சில் மாவைப் போட்டுப் பிழியவும். வெந்தவுடன் எடுக்கவும்.

 ✸கை முறுக்கு

தேவையானவை: பிசுக்குள்ள பச்சரிசி – 2 கப், உளுத்தம்பருப்பு – கால் கப், வெண்ணெய் – 6 டேபிள்ஸ்பூன், எள்
- ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் – சிறிதளவு, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:
கை முறுக்கு சுற்ற பிசுக்குள்ள அரிசியாக இருந்-தால் நல்லது. அரிசியை தண்ணீ-ரில் அரை மணி

நேரம் ஊற வைக்கவும். ஊறிய பிறகு வெள்ளைத் துணியில் முடிந்து வைத்தால் தண்ணீர் வடிந்து விடும். பிறகு

அதை மிக்ஸியில் போட்டு மாவாக்கி நைஸாக சலிக்கவும். உளுத்தம்பருப்பை பொன்னிறமாக வறுத்து, அரைத்து சலித்துக்
 கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, உளுந்து மாவு, எள், பெருங்காயத்தூள், உப்பு, வெண்ணெய் சேர்த்து பிசையவும்.

மாவு பதம் நன்றாக இருந்தால்தான் நன்றாக முறுக்கு சுற்ற முடியும். வெள்ளைத் துணி மேல் ஒரு பாட்டில்

மூடியை வைத்து, அதைச் சுற்றி முறுக்கு சுற்றவும்.

கடாயில் எண்ணெய் காய்ந்ததும், அதில் ஒவ்வொரு முறுக்காக மெதுவாக எடுத்து நிதானமாக போடவும்.

முதலில் சடசடவென சத்தம் வரும். ஒரு பக்கம் வெந்ததும், முறுக்குகளைத் திருப்பிப் போட வேண்டும். வெந்த

முறுக்கு எண்ணெயில் மிதக்கும். சடசட சத்தம் அடங்கியதும், எண்ணெயை வடிய விட்டு முறுக்கை எடுக்கவும்.

தேங்காய் எண்ணெயில் செய்தால் மொறு மொறுப்பாகவும், மணமாகவும் இருக்கும்

Friday 31 July 2020

ஏலக்காய் - 6 (பொடி)
முந்திரி - தேவையான அளவு 
பிஸ்தா - தேவையான அளவு
நெய் - தேவையான அளவு
 
செய்முறை :
 
* பலாப்பழத்தில் இருந்து கொட்டைகளை நீக்கி விட்டு தனியாக வைக்கவும். ஒரு பலாப்பழத்தை மட்டும் பொடியாக நறுக்கி  வைக்கவும்.
 
* ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி பலாப்பழத்தை வேக வைத்து ஆற வைக்கவும். ஆறியதும் மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வெல்லம் போட்டு நன்றாக கரைந்ததும் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.  கடாயில் நெய் ஊற்றி முந்திரி, பிஸ்தாவை வறுத்து வைக்கவும்.
 
* ஒரு பாத்திரத்தில் வெல்லப் பாகை ஊற்றி ஒரு நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும் மசித்து வைத்த பலாப்பழ விழுதை போட்டு அதன்பின் ஏலத்தூள், தேங்காய் பால் ஊற்றி ஒரு கொதிநிலை வந்தவுடன் நெய்யில் வறுத்த முந்திரி, பிஸ்தா, பொடியாக நறுக்கிய பலாப்பழத்தை போட்டு இறுதியில் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து இறக்கி பரிமாறவும். சுவையான இனிப்பான  பலாப்பழம் பாயாசம் தயார்.

Tuesday 12 May 2020

Bedmi poori

3 cups Whole wheat flour
1 cup Dhuli urad dal / Skinned black lentil
2 inch Ginger
3-4 Green chilies Chopped
1/4 cup Oil Plus for frying
2 tsp Salt
2 tsp Fennel powder
1 tsp Coriander powder
1/2 tsp Red chilli powder
1 tsp Dry mango powder
1/4 tsp Hing

Wash and soak Urad dal in enough water for 6-8 hours.
Drain the water completely.
Grind the dal with ginger and green chilies in a blender to make a coarse paste.
Add little water if required.
Add whole wheat flour in a bowl.
Now add the dal paste, 1/4 cup oil, salt, fennel powder, coriander powder, red chilli powder, dry mango powder and hing in the flour.

Mix everything nicely.
Add little water and knead a tight dough.
Cover and keep the dough aside for 10-15 minutes.
Make small balls from the dough.
Roll the balls using little oil to a 3-4 inch circle.
Heat oil in a pan.
When the oil is hot, deep fry the pooris till golden brown from both the sides.
Remove the poories on a kitchen towel lined plate.
Serve hot with heeng zeere ke aloo.
Recipe Notes
The dough to make bedmi poori should be tight just like poori dough.

Double frying method ensures the poories fluff up properly.

Saturday 14 March 2020

க்ரிஸ்பி சிலிண்டர்


வரகரிசி..1கப்
சாமை அரிசி..1கப்
பெரிய வெங்காயம்..1
புள்க்காத கெட்டித் தயிர்..1/2 கப்
காரட் துருவல்..1/2 கப்
பொடி ரவை..3ஸ்பூன்
சிறு துண்டுகளாக்கிய மிந்திரி..2டீஸ்பூன்
பெருங்காயப் பொடி..சிறிது
காரப்பொடி..1 டீஸ்பூன்
கரம் மசாலா..1ஸ்பூன்
விழுது நெய்..2 டீஸ்பூன்
பச்சை மிளகாய்..2
இஞ்சி..சிறுதுண்டு
உப்பு, எண்ணெய்..தேவையான அளவு

செய்முறை
வரகரிசி,சாமையை நன்கு களைந்து தயிரில் 1 மணி நேரம் ஊறவைக்கவும். வெங்காயம், இஞ்சி, பச்சைமிளகாயை பொடியாக நறுக்கவும். ஊறிய அரிசியுடன் ரவை, மிந்திரி, காரப்பொடி, கரம் மசாலா, நெய்,உப்பு சேர்த்து கெட்டியாகப் பிசைந்து நீள் வடிவ சிலிண்டர் போல் உருட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும். சாஸுடன் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். சத்தான சிறுதானிய ரெசிபி.

மிக்ஸட் நட்ஸ் ரௌண்ட்ஸ்

தேவை
துண்டுகளாக்கிய மிந்திரி..50 கிராம்
துண்டுகளாக்கிய பாதாம்..25 கிராம்
துண்டாக்கிய பிஸ்தா..15 கிராம்
விதை நீக்கிய பொடியாக நறுக்கிய பேரீச்சம்பழம்..50 கிராம்
வறுத்து தோல் உரித்து இரண்டாக்கிய வேர்க்கடலை..1/2 கப்
பொட்டுக்கடலை..1/2 கப்
கொப்பரைத் தேங்காய்த் துருவல்..1/4 கப்
லிக்விட் குளுகோஸ்..50 கிராம்
வெல்லம்..250 கிராம்
ஏலப்பொடி..1டீஸ்பூன்
சுக்குப் பொடி..1 டீஸ்பூன்
நெய்..7-8 டீஸ்பூன்

செய்முறை
மிந்திரி, பாதாம், பிஸ்தா, வேர்க்கடலை, பொட்டுக்கடலையை நெய்யில் தனித்தனியே வறுக்கவும்.
வெல்லத்தை கம்பிப் பதத்திற்கு முன்பான பாகு காய்ச்சி இறக்கவும்.அதில் வறுத்த நட்ஸ், கடலை, பொட்டுக்கடலை சேர்க்கவும். துண்டாக்கிய பேரீச்சை, கொப்பரைத் துருவல், லிக்விட் குளுகோஸ், ஏலப்பொடி  சேர்த்து நன்கு கிளறவும். சிறுசிறு உருண்டைகளாக்கவும். வித்யாசமான ருசியில் சத்தான இந்த உருண்டைகள் குழந்தைகளுக்கு பிடித்த பிக்னிக் ரௌண்ட்ஸ்!

ஹெல்தி டிட்பிட்ஸ்



தேவை
கடலை மாவு - 50 கிராம்
அரிசி மாவு - 50கிராம்
பொட்டுக் கடலை மாவு - 50கிராம்
பெருங்காயப்பொடி - ஒரு சிட்டிகை
சமையல் சோடா - 1சிட்டிகை
இஞ்சி -  1 சிறுதுண்டு
பச்சை மிளகாய் - 2 அல்லது 3
காரப்பொடி -1/2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
பாதாம் பருப்பு - 20 கிராம்
பிஸ்தா பருப்பு - 25கிராம்
முந்திரி பருப்பு - 25கிராம்
நெய் - 4 டீஸ்பூன்
எண்ணெய், உப்பு தேவையான அளவு
செய்முறை
பொட்டுக்கடலையை லேசாக சூடுவர வறுத்து பொடி செய்யவும்.
முந்திரிப்  பருப்பை சிறிய துண்டுகளாக உடைத்துக் கொள்ளவும்.
பாதாம் பிஸ்தாவை வெந்நீரில் ஊறவைத்து சிறு துண்டுகளாக்கவும்.
பச்சை மிளகாய், இஞ்சி, இவற்றை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
ஒரு அகலமான பாத்திரத்தில் பொட்டுக்கடலை மாவு, கடலை மாவு, அரிசி மாவு, சமையல் சோடா, காரப்பொடி, கரம் மசாலா, உடைத்த முந்திரி, பாதாம், பிஸ்தாபருப்பு, வெங்காயம்,  இவற்றுடன் மிக்ஸியில் அரைத்த விழுது, உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
நெய்யை சூடாக்கி கலவையில் கொட்டவும்.
சிறிது தண்ணீர் சேர்த்து கலவையை கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
ஒரு வாணலியில் பொறிப்பதற்கு தேவையான எண்ணெயை சூடாக்கவும்.
மாவு கலவை சிறிது எடுத்துக் கொண்டு பிசிறினாற் போல் காய்ந்த எண்ணெயில் போட்டு பொறிக்கவும். சிவந்தவுடன் எடுத்து வடிய விடவும்.
இனிமையான  ஹெல்தி டிட்பிட்ஸ் பிக்னிக் சமயங்களுக்கு ஏற்ற ரெசிபி!  குழந்தைகளுக்கு சத்தானது.

Wednesday 4 March 2020

இளநீர் ரசம்


ஒரு கல்யாண விருந்தில் இந்த ரசம் பரிமாற பட்டது. நான் அந்த சமையல் நிபுனரிடம் பேசி இந்த நுணுக்கத்தை பெற்றேன்.

தேவையான பொருட்கள் :

இளநீர் – 2
துவரம்பருப்பு வேகவைத்தது – 1 டேபிஸ் ஸ்பூன்
தக்காளி – 1
மிளகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
கடுகு – ½ டீஸ்பூன்
வெந்தயம் – ½ டீஸ்பூன்
மிளகாய் – 1
பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை.
உப்பு – 1 டீஸ்பூன்
புளி – 2 சுளை.
எண்ணெய்/நெய் – 2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை – 1 இணுக்கு.
கொத்தமல்லி தழை - சிறிதளவு

செய்முறை :

1.இளநீரை தனியாக எடுத்து வைக்கவும். அதில் உள்ள வழுக்கையையும் தனியாக வைக்கவும்.

2.கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

3.உப்புப் புளியை ½ கப் தண்ணீரில் ஊறவைத்து கரைத்து அதில் தக்காளி, இளநீர் வழுக்கையையும் போட்டுப் பிசைந்து வைக்கவும்.

4.அதில் மிளகாய், மிளகு, சீரகத்தைப் பொடித்துப் போடவும்.

5.வேகவைத்த துவரம் பருப்பைக் கரைத்து ஊற்றவும்.

6. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், வெந்தயம் தாளித்து கறிவேப்பிலை பெருங்காயப் பொடி போட்டுக் கரைத்து வைத்துள்ள புளிக்கலவையை கலவையை ஊற்றவும்.

7.அதுசூடேறி வரும்போது இளநீரை ஊற்றிக் கொதி வரும் முன் கொத்தமல்லி தூவி இறக்கவும்.

Monday 17 February 2020

நட்ஸ் பக்கோடா

தேவையான பொருட்கள்
எண்ணெய், உப்பு தேவையான அளவு
நெய் - 2 டீஸ்பூன்
பெருங்காயப்பொடி - ஒரு சிட்டிகை
சமையல் சோடா - 1சிட்டிகை
இஞ்சி -  1 சிறுதுண்டு
பச்சை மிளகாய் - 2 அல்லது 3
வெங்காயம் பெரியது- 2
அரிசி மாவு - 50கிராம்
கடலை மாவு - 100கிராம்
பாதாம் பருப்பு - 20 கிராம்
முந்திரி பருப்பு - 25கிராம்
வழிமுறைகள்
முந்திரி  பருப்பை சிறிய துண்டுகளாக உடைத்துக் கொள்ளவும்.
பாதாமை வெந்நீரில் ஊறவைத்து சிறு துண்டுகளாக்கவும்.
வெங்காயத்தை பொடியாக அரிந்து கொள்ளவும்.
பச்சை மிளகாய், இஞ்சி, இவற்றை மிக்ஸில் அரைத்துக் கொள்ளவும்.
ஒரு அகலமான பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, சமையல் சோடா, உடைத்த முந்திரி, பாதாம்  பருப்பு, வெங்காயம்,  இவற்றுடன் மிக்ஸியில் அரைத்த விழுது, உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
சிறிது நெய்யை சூடாக்கி கலவையில் கொட்டவும்.
சிறிது தண்ணீர் சேர்த்து கலவையை கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
ஒரு வாணலியில் பொறிப்பதற்கு தேவையான எண்ணெயை சூடாக்கவும்.
மாவு கலவை சிறிது எடுத்துக் கொண்டு பிசிறினாற் போல் காய்ந்த எண்ணெயில் போட்டு பொறிக்கவும். சிவந்தவுடன் எடுத்து வடிய விடவும்.
இனிமையான மாலை நேர தெருக்கடை உணவு மொறு மொறு முந்திரி பக்கோடா ரெடி!  

Wednesday 12 February 2020

ரகடா பட்டீஸ்

தேவையான பொருட்கள்
பரிமாற தேவை....
பூண்டு சட்னி
க்ரீன் சட்னி
இனிப்பு சட்னி
சேவ் எனப்படும் மெலிதான ஓமப்பொடி
பொடியாக நறுக்கிய வெங்காயம்
பொடியாக நறுக்கிய தக்காளி
ஓமப்பொடி....
கடலை மாவு...1 1/2கப்
உப்பு...தேவையான அளவு
நெய்...3டீஸ்பூன்
மஞ்சள் பொடி...1/2 டீஸ்பூன்
காரப்பொடி...1/2 டீஸ்பூன்
பெருங்காயப்பொடி...சிறிது
மிளகுபொடி...1/4 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்துமல்லி

பூண்டு சட்னி...
உப்பு....தேவையான அளவு
தனியா பொடி...1/2 டீஸ்பூன்
சீரகப்பொடி...1டீஸ்பூன்
காரப்பொடி...2டீஸ்பூன்
பூண்டுபற்கள்...15
உப்பு....தேவையான அளவு

க்ரீன் சட்னி....
எலுமிச்சை சாறு...3டீஸ்பூன்
உப்பு...1/4 டீஸ்பூன்
இஞ்சி... சிறு துண்டு
பச்சைமிளகாய்...2
நிலக்கடலை... 2 டேபிள்ஸ்பூன்
புதினா...1/4 கப்
கொத்துமல்லி...1/2 கப்

இனிப்பு சட்னி....
தண்ணீர்...1 1/2 கப்
உப்பு...1டீஸ்பூன்
காலாநமக்(கருப்பு உப்பு)....1/4டீஸ்பூன்
காரப்பொடி...1/2டீஸ்பூன்
வெல்லம்...1/4 கப்
புளி...எலுமிச்சை அளவு
விதையில்லாத பேரீச்சை...10
தண்ணீர்...1 1/2 கப்
உப்பு...1டீஸ்பூன்

பட்டீஸ் செய்ய...
உருளைக் கிழங்கு...4 (வேகவைத்து உரித்து நன்கு மசிக்கவும்)
கார்ன் ஃப்ளவர்...3டேபிள்ஸ்பூன்
உப்பு...தேவையான அளவு
எண்ணை...4டீஸ்பூன்
காரப்பொடி...1டீஸ்பூன்

ரகடாவிற்கு...
காய்ந்த பட்டாணி...1கப்
தக்காளி...1(பொடியாக நறுக்கவும்)
பெரியவெங்காயம்...1(பொடியாக நறுக்கவும்.)
எண்ணை...4டீஸ்பூன்
கறிவேப்பிலை...ஒருகொத்து
வெல்லம்...சிறுதுண்டு
கரம்மசாலா...1/2 டீஸ்பூன்
காரப்பொடி ...3/4 டீஸ்பூன்
தனியாபொடி...1டீஸ்பூன்
மஞ்சள்பொடி...1டீஸ்பூன்
இஞ்சி பச்சைமிளகாய் விழுது...2டீஸ்பூன்
சீரகம்...1டீஸ்பூன்
கடுகு...1டீஸ்பூன்
பெருங்காயத்தூள்...1/4 டீஸ்பூன்
உப்பு...தேவையான அளவு
எலுமிச்சைசாறு...2டீஸ்பூன்

செய்முறை
வழிமுறைகள்
ரகடா செய்முறை... பட்டாணியை இரவு தண்ணீரில் ஊற வைக்கவும்.
மறுநாள் குக்கரில் 5,6 சத்தம் வரும்வரை வேகவிடவும். வெளியில் எடுத்து மசித்து வைத்துக் கொள்ளவும்.
எண்ணெயைக் காயவைத்து அதில் பெருங்காயம், கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளிக்கவும்.
அதில் இஞ்சி பச்சைமிளகாய் விழுது வதக்கி, அதிலேயே நறுக்கிய தக்காளி, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
நன்கு வதக்கியதும் அதில் மஞ்சள்பொடி, தனியாபொடி, காரப்பொடி, கரம்மசாலா, சேர்த்து மேலும் சற்று வதக்கவும்.
அதில் வேகவிட்ட பட்டாணி,உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். வெல்லம் சேர்க்கவும்.

பட்டீஸ் செய்முறை...உருளைக் கிழங்கை வேகவிட்டு தோலி நீக்கி உரித்து நன்கு மசிக்கவும்.
அத்துடன் கார்ன் ஃப்ளவர், உப்பு, காரப்பொடி எண்ணை சேர்த்து தேவையான தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து மூடி வைக்கவும்.
1/2 மணி கழித்து நன்கு பிசைந்து எலுமிச்சை அளவு மாவு எடுத்து உள்ளங்கையில் வட்டமாக கனமாகத் தட்டவும்.
தோசைக்கல்லை காயவைத்து அதில் பட்டீசைப் போட்டு சுற்றிலும் எண்ணெய் விட்டு இரு பக்கமும் சிவக்க வேகவிடவும். பட்டீஸ் ரெடி!

இனிப்பு சட்னி செய்முறை... புளியை ஒன்றரை கப் தண்ணீரில் ஊறவைத்து கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும்.
பேரீச்சையை 2 நிமிடம் நீரில் கொதிக்கவிட்டு அரைக்கவும்.
புளித்தண்ணீரை கொதிக்கவிட்டு புளி வாசனை போய் சற்று கெட்டியானதும் அதில் அரைத்த பேரீச்சை விழுது, வெல்லம், சீரகப்பொடி, காரப்பொடி, காலாநமக்,உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
கெட்டியானதும் இறக்கி ஆறியதும் எடுத்து வைக்கவும். இனிப்பு சட்னி ரெடி!

க்ரீன் சட்னி செய்முறை... கடலை,இஞ்சி,பச்சைமிளகாய்,,உப்பு சேர்த்து நைஸாக அரைக்கவும்.
அத்துடன் கொத்துமல்லி, புதினா,எலுமிச்சை சாறு சேர்த்து கெட்டியாக அரைக்கவும். க்ரீன் சட்னி ரெடி!

பூண்டு சட்னி செய்முறை... பூண்டு தோலி நீக்கி மற்ற சாமான்களுடன் சேர்த்து மிக்ஸியில் நீர் சேர்க்காமல் கெட்டியாக அரைக்கவும். பூண்டு சட்னி ரெடி!

ஓமப்பொடி செய்முறை... எல்லாம் சேர்த்து தேவையான நீர் சேர்த்து கெட்டியாகப் பிசையவும்
வாணலியில் எண்ணெய் சுட வைத்து தேங்குழல் படியில் மெல்லிய ஓமப்பொடி தட்டைப் போட்டு ஓமப்பொடிகளாகப் பிழியவும். ஓமப்பொடி ரெடி!

பரிமாறும் முறை.. ரகடா, பட்டீஸ் இரண்டும் சூடாக இருந்தால் ருசி அருமையாக இருக்கும்.

ஒரு தட்டில் இரண்டு பட்டீசை வைத்து அது முழுகும் அளவு ரகடா சேர்க்கவும்.

மேலே எழுதியுள்ள முறைப்படி சட்னிகளைத் தயாரித்து உங்கள் சுவைக்கேற்றபடி க்ரீன் சட்னி, இனிப்பு சட்னி, பூண்டு சட்னி சேர்க்கவும்.

அதன்மேல் நறுக்கிய தக்காளி, வெங்காயம் சேர்க்கவும். மேலே கொத்துமல்லி, ஓமப்பொடி தூவி பரிமாறவும்.

எல்லாவற்றையும் கலந்து சாப்பிடும்போது கிடைக்கும் ருசி மிக அருமையாக இருக்கும்.


Saturday 8 February 2020

கோல்கப்பா


தேவை
உருளைக்கிழங்கு...4
கருப்பு, வெள்ளை கொத்துக்கடலை(இரண்டுமாக)...1/2 கப்
உப்பு...தேவையான அளவு
சாட்மசாலா...1/4 டீஸ்பூன்
காஷ்மிரி மிளகாய்ப்பொடி...1/2 டீஸ்பூன்

இம்லி கி சட்னி or ஸ்வீட் சட்னி செய்ய...
சுக்குப்பொடி...1/4 டீஸ்பூன்
காரப்பொடி...1/2 டீஸ்பூன்
தனியாபொடி...1/2டீஸ்பூன்
வறுத்து பொடித்த சீரகப்பொடி...1/2டீஸ்பூன்
வெல்லம்...1/2 கப்
கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம்...10
புளி...1/2 கப்(கொட்டை நார் நீக்கவும்.)
உப்பு...தேவையான அளவு

ஜல்ஜீரா செய்ய...
காலாநமக்...1/4 டீஸ்பூன்
சாட்மசாலா...1டீஸ்பூன்
பெருங்காயப்பொடி...2சிட்டிகை
அம்சூர் பொடி...3/4டீஸ்பூன்
ஏலக்காய் பொடி...1/4 டீஸ்பூன்
மிளகு...1/2 டீஸ்பூன்
சோம்பு...1டீஸ்பூன்
சீரகம்...1டீஸ்பூன்
புதினா...1/2 கப்
புளி...பெரிய நெல்லிக்காய் அளவு
உப்பு...தேவையான அளவு

பூரி செய்ய......
பொடிரவை...1கப்
மைதா...4டீஸ்பூன்
வேகவிட எண்ணெய்...1டீஸ்பூன்
உப்பு...1/4 டீஸ்பூன்
பேகிங் பவுடர்...1/4டீஸ்பூன்

வழிமுறைகள்
பூரி செய்முறை... ரவா, மைதா,பேகிங் பவுடர், உப்பு,எண்ணெய் சேர்த்து பிசறவும்.
பின்பு 2 டேபிள்ஸ்பூன் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளும்படி பிசையவும். அப்பொழுதுதான் மாவில் எலாஸ்டிக் தன்மை வரும்.
மேலும் தேவையான நீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து ஒரு ஈரத்துணியால் மூடி வைக்கவும்.
அரைமணி நேரம் கழித்து மீண்டும் அழுத்திப் பிசைந்து பூரிகளாக இடவும்.பூரிகள் மிக மெலிதாகவோ,அதிக கனமாகவோ இருக்கக் கூடாது.
அதில் ஒரு வட்டமான சிறு மூடியால் அழுத்தி சிறு பூரிகளை தனியே எடுத்து போட்டு வைக்கவும்.

எண்ணெய் காய்ந்ததும் அதில் 2,3 பூரிகளாக போடவும்.சிறு ஸ்பூனால் லேசாக அழுத்தினால் அவை நன்கு உப்பிக் கொள்ளும். கோல்கப்பா ரெடி!

ஜல்ஜீரா செய்முறை... புளியை சிறிதளவு வெந்நீரில் ஊறவைத்து ,அத்துடன் புதினா மற்றும் மேலே கூறப்பட்டுள்ள எல்லா சாமானும் சேர்த்து நல்ல நைஸாக அரைக்கவும்.
அத்துடன் 1கப் நீர் சேர்க்கவும். கொத்துமல்லி பொடியாக நறுக்கி சேர்க்கவும்.இதுவே ஜல்ஜீரா.

இம்லி கி சட்னி or ஸ்வீட் சட்னி செய்முறை... அரை கப் நீரில் புளி, பேரீச்சை இரண்டும் சேர்த்து 10நிமிடம் கொதிக்க விடவும்.
அதில் வெல்லம் சேர்க்கவும். எல்லாம் கொதித்து கெட்டியானதும் அதில் எல்லா பொடிகளும் போட்டு தேவையான உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
ஆறியதும் மிக்ஸியில் நைஸாக அரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும். இதுவே இனிப்பு சட்னி.

கருப்பு,வெள்ளை கொத்துக்கடலைகளை முதல்நாள் இரவு ஊறவைக்கவும்.
மறுநாள் குக்கரில்5,6 சத்தம் வரும்வரை நன்கு வேகவிடவும்.
உருளைக்கிழங்கை வேகவிட்டு நன்கு மசித்து, வெந்த கொத்துக் கடலையுடன் சேர்த்து, அதில் காஷ்மிரி மிளகாய்ப்பொடி, சாட் மசாலா,உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.

கோல்கப்பாவின் மேல் விரலால் துளை செய்து அதில் உருளைக்கிழங்கு சனாமிக்ஸ், மேலே இனிப்பு சட்னி சேர்க்கவும்.
அதன்மேல் ஜல்ஜீரா தேவையான அளவு சேர்த்து சாப்பிடவும். கோல்கப்பா ருசி மிக அருமையாக இருக்கும்!

டில்லியில் கோல்கப்பா எனக் கூறப்படும் சுவையான இந்த தெருக்கடை உணவில் மேலே பொடியாக நறுக்கிய வெங்காயம், ஸேவ் எனப்படும் ஓமப்பொடி தூவினால் மும்பையின் பானிபூரி!

வங்காளத்தில் புச்கா, பீகார்,ஒரிஸ்ஸாவில் கொத்துக்கடலைக்கு பதிலாக காய்ந்த பட்டாணி வேகவைத்து சேர்த்து குப்சுப் என்ற பெயரிலும் அழைக்கப்படும் இந்த கோல்கப்பா வடமாநிலங்களில் பெரும்பாலான மக்களின் மிக மிக விருப்பமான தெருக்கடை உணவு!

Friday 7 February 2020

Mojito mocktail

  1. Muddle the sugar with leaves from the mint using a pestle and mortar (or use a small bowl and the end of a rolling pin).
  2. Put a handful of crushed ice into 2 tall glasses. Divide the lime juice between the glasses with the mint mix. Add a straw and top up with soda water.

Pomegranate Mojito Mocktail

  • 3 tbsp pomegranate  seeds
  • big bunch mint
  • limes , quartered, plus slices to garnish
  • 1l pomegranate juice
  • 500ml lemonade
  1. A day ahead, divide the pomegranate seeds between the holes in an ice cube tray, top up with water and freeze.
  2. Reserve half the mint for serving, and tear the rest into a large jug with the lime quarters. Using a rolling pin, bash the mint and lime to release the flavours. Add the pomegranate juice and lemonade. Put ice cubes in each glass, then strain over the pomegranate mix through a small sieve. Garnish with lime slices and more mint.

Friday 31 January 2020

ஹேஸல்நட்(Hazel nut) கேக்

ஆஷாட ஏகாதசிக்கு பண்டரிநாதனுக்கு பாயசத்துடன்  ஏதாவது ஸ்வீட் பண்ணலாமேனு யோசிச்சேன்!

என் பிள்ளை போனமுறை வந்தபோது ஜெர்மனியிலிருந்து வாங்கி வந்த ஹேஸல்நட் பவுடர் இருந்தது. இதை வைத்து ஒரு கேக் பண்ணலாமென்று முடிவு செய்தேன்.

ஹேஸல்நட் என்பது  கொண்டைக்கடலை மாதிரி பெரியதாக இருக்கும். மிக சத்தானது என்பான் என் பிள்ளை.

வெளிநாடுகளில்  மட்டுமே இதை நான் பார்த்ததுண்டு. பாதாம், மிந்திரி, பிஸ்தா, வால்நட் போல் இதில் சாக்லேட், பிஸ்கட் எல்லாம் செய்வார்கள்.

ஆனால் இதில் நம்ம மெதட்ல கேக் பண்ணினா எப்படி இருக்குமோ என்று உள்ளூர பயம்!

கசக்குமோ..துவர்க்குமோ?  கண்ணனை வேண்டிக் கொண்டு கேக் பண்ணி நைவேத்யமும் பண்ணிவிட்டு சாப்பிட்டோம். அருமையாக இருந்தது!

Hazelnutற்கு தமிழ்ப் பெயர் தெரியவில்லை. Googleலும் சரியான பெயர் கண்டுபிடிக்க முடியவில்லை! எப்படியோ பாண்டுரங்கனுக்கு ஒரு புதிய இனிப்பு பண்ணி கொடுத்தாச்சு!

தேவை
ஹேஸல்நட் மாவு..1கப்
தேங்காய் துருவல்1கப்
நெய்..1கப்
பால்..1கப்
சர்க்கரை..3கப்
ஏலப்பொடி..1டீஸ்பூன்

செய்முறை
கடலைமாவை வாணலியில் லேசாக வறுக்கவும்.சிவக்கக் கூடாது.

அத்துடன் ஹேஸல்நட் மாவு, பால், நெய்,சர்க்கரை இவற்றை ஒன்றாக சேர்த்து கலக்கவும்.

கேஸை சிம்மில் வைத்து நன்கு கலந்து கைவிடாமல் கிளறவும்.

நன்கு பூத்து வந்து ஒட்டாமல் சுருண்டு வரும்போது ஏலப்பொடி சேர்க்கவும்.

மிந்திரி தேவையெனில் நெய்யில் வறுத்து சேர்க்கவும். தட்டில் கொட்டி துண்டுகளாக்கவும்.

இதில் ஹேஸல்நட்டுக்கு பதிலாக பாதாம் பவுடர் சேர்த்தும் செய்யலாம்.







Thursday 30 January 2020

அக்காரவடிசில்


தேவை
அரிசி – 1 கப்
பயத்தம் பருப்பு – 1/4 கப்
வெல்லம் – 2  1/2 கப்
ஏலப்பொடி – 2 டீஸ்பூன்
மிந்திரி --10
பால்...6 கப்
நெய்…1 கப்

செய்முறை:
அரிசி மற்றும் பயத்தம் பருப்பைக் களைந்து, நன்கு நீரை வடித்துவிட்டு, வாணலியில் 2 டீஸ்பூன் நெய் விட்டு வறுத்துக் கொள்ளவும்.

பின் 3கப் பால் + 2கப் நீர் சேர்த்து குக்கரில் நன்கு குழைய வேக விட வேண்டும்.

வாணலியில் வெல்லத்துடன் சிறிது நீர் சேர்த்து, கரைந்ததும் வடிகட்டிக் கொள்ளவும்.

வாணலியில் குழைய வேகவைத்த அரிசிக் கலவை, வடிகட்டிய வெல்லக் கரைசலுடன் மேலும் 2 கப் பால் சேர்த்து சிறுதீயில் கிளற ஆரம்பிக்க வேண்டும்.

இறுக இறுக மீதமுள்ள பால் சேர்த்துக் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.

சிறிது நேரம் சென்றபின் நெய்யைச் சேர்க்க வேண்டும். நெய் பிரிய கிளறி இறக்கி, ஏலப்பொடி, நெய்யில் வறுத்த மிந்திரி, திராட்சை சேர்த்து இறக்கவும்.

Wednesday 8 January 2020

ரவை கிச்சடி


தேவை
 ரவை  -1  கப்
பட்டை -1
கிராம்பு -1
ஏலக்காய் -1
வெங்காயம் -1
தக்காளி -1
கேரட் -1
பீன்ஸ் -5
பச்சை பட்டாணி -1 /2 கப்
இஞ்சி பூண்டு விழுது -1ஸ்பூன்(தேவையெனில்)
பச்சைமிளகாய் -3
மஞ்சள்தூள்-1/4ஸ்பூன்
கரம் மசாலா -1 1/2 ஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
தண்ணீர் -3 1/2கப்
நெய் 1ஸ்பூன்
கொத்தமல்லி இலை -சிறிது
கறிவேப்பிலை 
செய்முறை
காய்கறி நீளவாக்கில் நறுக்கவும்.
வாணலியில் நெய் சேர்த்து  ரவையை  வறுத்துக்கொள்ளவும்.
வாணலியில் நெய்  ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு வெங்காயம்,மிளகாய் சேர்த்து வதக்கவும்.
இஞ்சி பூண்டு விழுது போட்டு சற்று வதக்கி தக்காளி சேர்க்கவும்.
காய்கறி போட்டு நன்கு வதக்கவும். மஞ்சள்தூள்,  கரம் மசாலா சேர்த்து வதக்கி தண்ணீர் தெளித்து மூடி வைக்கவும்.
காய்கறி  வெந்தவுடன் 11/2கப் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கொதிக்கவிடவும்.
தண்ணீர் கொதித்தவுடன் ரவையைப்  போட்டு கிளறி வேகவிடவும். ரவை வெந்தவுடன் கொத்தமல்லி,கறிவேப்பிலை  தூவி இறக்கவும்.

Tuesday 7 January 2020

அவல் ஸ்வீட் பொங்கல்


தேவையான பொருட்கள்:
அவல் - 1/2 கிலோ
வெல்லம் - 1/2 கிலோ
பாசிப்பருப்பு - 150 கிராம்
ஏலக்காய் - 6
கிஸ்மிஸ் பழம் - 20
தேங்காய் பால் - 1 டம்ளர்(200 மி.லி)
காய்ச்சிய பால் - 1 டம்ளர்(200 மி.லி)
தேங்காய் சில்(பொடியாக நறுக்கியது - 1 கப்
நெய் - 100 கிராம்
உப்பு - ஒரு சிட்டிகை
செய்முறை:
* வெல்லத்தை பொடித்து தண்ணீரில் கலந்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
* பாசிப்பருப்பை குழைய வேகவைத்துக் கொள்ளவும்.
* அவலை வெந்நீரில் ஊறவைத்துக் கொள்ளவும்.
* வெட்டி வைத்திருக்கும் தேங்காய் சில்-லில் பாதியை நெய்யில் வறுத்து ஆற வைக்கவும்.
* வெந்த பாசிப்பருப்புடன், ஊறவைத்து அவலை சேர்க்கவும். அதனுடன் வெல்லப்பாகு கலந்து, பால், தேங்காய் பால் ஊற்றி கொதிக்க விடவும்.
* அடிபிடிக்காமல் கிளறிக்கொண்டே இருக்கவும். மறக்காமல் ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கவும். உப்பு அதிகமாக சேர்த்து விடக் கூடாது.
* நன்கு குழைந்து பொங்கல் பதத்துக்கு வந்தவுடன், இறக்கி நெய்யில் வறுத்த ஏலக்காய், முந்திரிப் பருப்பு, கிஸ்மிஸ் பழம், வறுத்த தேங்காய், மீதமுள்ள தேங்காய் சில், நெய் ஊற்றி கிளறி விடவும்.
* நெய் மணத்துடன் கமகமக்கும் சுவையான அவல் பொங்கல் தயார்.