Wednesday 8 January 2020

ரவை கிச்சடி


தேவை
 ரவை  -1  கப்
பட்டை -1
கிராம்பு -1
ஏலக்காய் -1
வெங்காயம் -1
தக்காளி -1
கேரட் -1
பீன்ஸ் -5
பச்சை பட்டாணி -1 /2 கப்
இஞ்சி பூண்டு விழுது -1ஸ்பூன்(தேவையெனில்)
பச்சைமிளகாய் -3
மஞ்சள்தூள்-1/4ஸ்பூன்
கரம் மசாலா -1 1/2 ஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
தண்ணீர் -3 1/2கப்
நெய் 1ஸ்பூன்
கொத்தமல்லி இலை -சிறிது
கறிவேப்பிலை 
செய்முறை
காய்கறி நீளவாக்கில் நறுக்கவும்.
வாணலியில் நெய் சேர்த்து  ரவையை  வறுத்துக்கொள்ளவும்.
வாணலியில் நெய்  ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு வெங்காயம்,மிளகாய் சேர்த்து வதக்கவும்.
இஞ்சி பூண்டு விழுது போட்டு சற்று வதக்கி தக்காளி சேர்க்கவும்.
காய்கறி போட்டு நன்கு வதக்கவும். மஞ்சள்தூள்,  கரம் மசாலா சேர்த்து வதக்கி தண்ணீர் தெளித்து மூடி வைக்கவும்.
காய்கறி  வெந்தவுடன் 11/2கப் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கொதிக்கவிடவும்.
தண்ணீர் கொதித்தவுடன் ரவையைப்  போட்டு கிளறி வேகவிடவும். ரவை வெந்தவுடன் கொத்தமல்லி,கறிவேப்பிலை  தூவி இறக்கவும்.

No comments:

Post a Comment