Wednesday 4 March 2020

இளநீர் ரசம்


ஒரு கல்யாண விருந்தில் இந்த ரசம் பரிமாற பட்டது. நான் அந்த சமையல் நிபுனரிடம் பேசி இந்த நுணுக்கத்தை பெற்றேன்.

தேவையான பொருட்கள் :

இளநீர் – 2
துவரம்பருப்பு வேகவைத்தது – 1 டேபிஸ் ஸ்பூன்
தக்காளி – 1
மிளகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
கடுகு – ½ டீஸ்பூன்
வெந்தயம் – ½ டீஸ்பூன்
மிளகாய் – 1
பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை.
உப்பு – 1 டீஸ்பூன்
புளி – 2 சுளை.
எண்ணெய்/நெய் – 2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை – 1 இணுக்கு.
கொத்தமல்லி தழை - சிறிதளவு

செய்முறை :

1.இளநீரை தனியாக எடுத்து வைக்கவும். அதில் உள்ள வழுக்கையையும் தனியாக வைக்கவும்.

2.கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

3.உப்புப் புளியை ½ கப் தண்ணீரில் ஊறவைத்து கரைத்து அதில் தக்காளி, இளநீர் வழுக்கையையும் போட்டுப் பிசைந்து வைக்கவும்.

4.அதில் மிளகாய், மிளகு, சீரகத்தைப் பொடித்துப் போடவும்.

5.வேகவைத்த துவரம் பருப்பைக் கரைத்து ஊற்றவும்.

6. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், வெந்தயம் தாளித்து கறிவேப்பிலை பெருங்காயப் பொடி போட்டுக் கரைத்து வைத்துள்ள புளிக்கலவையை கலவையை ஊற்றவும்.

7.அதுசூடேறி வரும்போது இளநீரை ஊற்றிக் கொதி வரும் முன் கொத்தமல்லி தூவி இறக்கவும்.

No comments:

Post a Comment