திங்கள், 1 செப்டம்பர், 2014

வீட் ஹல்வா

தேவை 

சம்பா  கோதுமை-- 1 கப்


சர்க்கரை-- 21/2 கப்


நெய்-- 2 முதல்  2 1/4 கப் வரை


பாதாம்--  15


ஏலக்காய்  பொடி--- 1 தேக்கரண்டி


மிந்திரி  பருப்பு--- 20


எலுமிச்சை-- 1 மூடி


கேசரி  கலர்  பொடி--- 1/4 தேக்கரண்டி


குங்குமப்பூ- சிட்டிகை அளவு 
 

செய்முறை

கோதுமையை  முதல்  நாள்  இரவே  தண்ணீரில்  ஊற  வைக்கவும்.
மறுநாள்  காலையில்  மிக்ஸியில்  1  கப்  நீர் சேர்த்து அரைத்துப்  பாலை  ஒரு சல்லடையில்  வடிகட்டவும்.  மேலும்  இரண்டு  முறை  1/2  கப்  நீர்  சேர்த்து  பால்  எடுக்கவும்.  வடிகட்டிய  பாலை  3  மணி  நேரம்  அப்படியே  மூடி  வைக்கவும்.



பாதாமை  வென்னீரில்  ஊறவைத்து,  தோலி  நீக்கி சிறிதளவு  பாலுடன்  சேர்த்து  நல்ல  நைஸாக  அரைக்கவும்.


குங்குமப்பூவை சிறிதளவு  சூடான பாலில் ஊற வைக்கவும்.

அரைத்த  கோதுமைப்  பாலின்  மேல்  தெளிந்த  நீரை  வடித்து விடவும். கீழே  பால்  கெட்டியாக  இருக்கும். அத்துடன்  3-4  கப்  நீர்  சேர்த்து  நன்கு  கலக்கவும்.  அத்துடன்  கேசரி  பவுடரை  சேர்த்து  கலக்கவும்.





சர்க்கரையுடன்  1 கப்  நீர்  சேர்த்து  கம்பிப்  பதம்  வரும்  வரை  பாகாக்கவும்.

  
அதில்  கோதுமைப்பாலை    விட்டுக்  கிளறவும்.  பாலில்  அரைத்த  பாதாமையும்  சேர்க்கவும்.அடுப்பை சிம்மில் வைத்துக் கிளறவும்.
 






அடுப்பை சிம்மில் வைத்துக் கைவிடாமல்  கிளறவும்.  ஹல்வா  கெட்டியாகி,  நன்கு  பளபளப்பாக  வரும்.  அடியில்  ஒட்டும்போது    நெய்யை  உருக்கி  சிறிது  சிறிதாகச்  சேர்க்கவும்.



நெய்  பிரிந்து  வந்து  ஹல்வா  கெட்டியான  பின்பு,  ஏலப்பொடியை சேர்த்து, நெய்யில்  வறுத்த  மிந்திரி, பாலில் கரைத்த குங்குமப்பூ   சேர்க்கவும்.  எலுமிச்சை  சாறு  சேர்க்கவும். நன்கு கிளறவும்.






ஒட்டாமல்  வரும்போது,  நெய்  தடவிய  தட்டில்  கொட்டி,  ஆறியதும்  துண்டுகளாக்கவும். 




 சுவையான ஹல்வா ரெடி!





 சில குறிப்புகள்

கோதுமைப்பாலுடன்  3-4  கப்  நீர்  சேர்த்துக்  கிளறினால்தான்  நன்கு  வேகும். பாலை  விட்டதும்  கைவிடாமல்  கிளற  வேண்டும்.


எலுமிச்சை  ரசம்  பிழிவதால்  ஹல்வா கையில்  ஒட்டாமல்  நல்ல  ஷைனிங்காக  இருக்கும்.


ஹல்வா கிளறுவதற்கு சற்று  அதிக  நேரம்  பிடிக்கும்.  பொறுமையும்,  சற்று கூடுதலான கவனமும் இருந்தால்  எல்லாரும் சுவையான ஹல்வா செய்து எல்லோருக்கும்  ஹல்வா  கொடுத்துப் பாராட்டையும் பெறலாம்!!!



செவ்வாய், 6 மே, 2014

பனீர் பராத்தா..



தேவை

கோதுமை  மாவு--- 2 கப்

பனீர்-- 200  கிராம்

பெரிய  வெங்காயம்-- 2

சீரகம்-- 2 தேக்கரண்டி

மஞ்சள்பொடி--  1 தேக்கரண்டி

காரப்பொடி-- 2 தேக்கரண்டி

கரம்மசாலா-- 1 1/2 தேக்கரண்டி

பொடியாக  நறுக்கிய கொத்தமல்லி  தழை

எண்ணை-- தேவையான  அளவு

உப்பு-- தேவையான  அளவு




செய்முறை

கோதுமை மாவை  எண்ணை,  தண்ணீர்  சேர்த்து  சப்பாத்திக்கு  பிசைவது போல் கெட்டியாகப்  பிசைந்து  வைக்கவும்.




வெங்காயத்தைப் பொடியாகநறுக்கவும்.

பனீரை  காரட்  துறுவியில்  துறுவவும்.

சிறிதளவு  எண்ணையில்  சீரகம்  போட்டு  தாளித்து  அதில்  நறுக்கிய வெங்காயம் சேர்த்து  வதக்கவும். அதில்  மஞ்சள்  பொடி,  காரப்பொடி, கரம் மசாலா சேர்த்து கலந்து  அடுப்பிலிருந்து  இறக்கவும்.

 அதில்  துருவிய  பனீர்,  தேவையான  உப்பு,  கொத்தமல்லி  தழை  சேர்த்து நன்கு  கலந்து  சிறு  உருண்டைகளாக்கவும்.






பிசைந்த  மாவை  எலுமிச்சை  அளவு  எடுத்து,  அதை ஒரு  சிறிய  பூரி அளவு  இட்டு,  அதில்  பனீர்  பூரணம்  வைத்து  கனமான  பராத்தாகளாக இடவும்.

தவ்வாவில்  1  தேக்கரண்டி  எண்ணை  விட்டு,  அதில்  பராத்தாவைப் போட்டு, வெந்ததும் திருப்பிப்  போட்டு  மேலும் 1 தேக்கரண்டி  எண்ணை விடவும்.




நன்கு  வெந்ததும் எடுக்கவும். மேலே  சிறிது  வெண்ணை  தடவி ஊறுகாய், தயிருடன் பரிமாறவும்.

பராத்தாக்களுக்கு  ராய்த்தாவைவிடவெறும்  தயிர்தான் தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும்.



வியாழன், 20 மார்ச், 2014

வாழைக்காய் பொடிமாஸ்

தேவை

வாழைக்காய்-- 2 (பெரியது)

காரட்--- 1


தேங்காய்த்துருவல்--- 1/4 கப்


எலுமிச்சம்பழம்--- 1


பெருங்காயப்பொடி--- 2 சிட்டிகை


எண்ணை-- 4 தேக்கரண்டி


கடுகு--- 2  தேக்கரண்டி


உளுத்தம்பருப்பு--- 3 தேக்கரண்டி


இஞ்சி-- சிறுதுண்டு


பச்சை  மிளகாய்--- 3


மிந்திரி  பருப்பு--- 8


உப்பு-- தேவையான  அளவு


கறிவேப்பிலை





செய்முறை 

வாழைக்காயை  துண்டுகளாக்கி  தண்ணீரில்  தோலி  உரியும்  பதத்திற்கு  வேகவிடவும். 

ஆறியதும்  காரட்  துருவியில்  மெலிதாகச்  சீவிக்  கொள்ளவும்.
 
காரட்டையும்  துருவவும்.

இஞ்சி,  பச்சைமிளகாயை  பொடியாக  நறுக்கவும். 


வாணலியில்  எண்ணை  விட்டு  அதில்  பெருங்காயம்,  கடுகு  தாளித்து  உளுத்தம்பருப்பு,  மிந்திரி  சேர்த்து  சிவந்ததும்,  நறுக்கிய  இஞ்சி,  பச்சை  மிளகாய்,  கறிவேப்பிலை  தாளிக்கவும். 

அதில்  துருவிய  காரட்  சேர்த்து  ஒரு  நிமிடம்  வதக்கி,  அத்துடன்  துருவிய  வாழைக்காய்,  தேவையான  உப்பு  சேர்த்து  நன்கு  கிளறவும். 

மேலே  தேங்காய்த்துருவல்  சேர்த்து  நன்கு  கலந்து  இறக்கவும். 



எலுமிச்சை  சாறு  பிழிந்து  கலந்து  பரிமாறவும்.  சாம்பார்,  வற்றல்  குழம்பு  சாதத்துடன்  சாப்பிட  இந்த  பொடிமாஸ்  நன்றாக  இருக்கும்.  விருந்துகளுக்கு  ஏற்றது  இது.  

இதையே  வாழைக்காயைத்  துருவாமல்  வேகவிட்டதை  கையால்  உதிர்த்தும்  செய்யலாம்.

வியாழன், 13 மார்ச், 2014

அறுசுவைக் குழம்பு