Saturday 2 July 2016

சக்லி(மகாராஷ்டிரா)

தேவை 
கடலைப் பருப்பு    -      1 கிலோ
பச்சரிசி                -      2 கிலோ
உளுத்தம் பருப்பு    -      1 கப்
பயத்தம் பருப்பு            - 1/2 கப்
அவல்                   -      2 கப்
சீரகம்                   -      50 கிராம்
தனியா                 -      50 கிராம்
பொட்டுக்கடலை   -     1/2    
ஓமம் --4 டேபிள் ஸ்பூன்
உப்பு, காரப்பொடி - தேவையான அளவு
எண்ணெய்  -- வேகவிட 

கடலைப் பருப்பு, அரிசியைக் களைந்து சிறிது நேரம் ஊறவைத்துக் காயவிடவும். மற்ற ருப்புகளையும், அவலையும் தனித்தனியாக வாணலியில் பொன்னிறமாக வறுத்து, அத்துடன் சீரகம், பொட்டுக்கடலை, தனியா, ஓமம் மற்றும் காய்ந்த அரிசி-கடலைப் பருப்புக் கலவையையும் போட்டு மிஷினில் நைஸாக அரைக்கவும். 

அரைத்த மாவுடன் உப்பு, காரப்பொடி சேர்த்து, சிறிது வெண்ணெயும் சேர்த்து, நீர்விட்டுக் கெட்டியாகப் பிசையவும்.

முள்ளுத் தேங்குழல் ஒற்றைத் துளைத் தட்டில் மாவைப் போட்டு, பிளாஸ்டிக் பேப்பரில் கைமுறுக்கு போல் வட்டமாகச் சுற்றவும்.   எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். 

சற்று அடர் சிவப்பு நிறமாக இருக்கும் சக்லி, ருசியில் ‘ஏ’ ஒன்!

No comments:

Post a Comment