Monday 26 December 2016

கல்யாண பொங்கல்

தேவை:
பச்சை அரிசி  --1 கப்
பயத்தம்பருப்பு --¼ கப் 
நெய் -- 8 டீஸ்பூன் 
பால் -- ¼ கப்
பெருங்காயப்பொடி -- சிறிது
மிளகு --1 டீஸ்பூன் 
சீரகம் -- 1 டீஸ்பூன்
இஞ்சி -- 1 சிறிய துண்டு 
முந்திரி பருப்பு -- 12
திராட்சை -- 10
மிளகு சீரகப்பொடி --½ டீஸ்பூன் 
கறிவேப்பிலை -- 1 கொத்து 
கடுகு - 2 டீஸ்பூன் 
மஞ்சள்பொடி - 1½ டீஸ்பூன் 
உப்பு -- தேவையான அளவு

செய்முறை 
அரிசியுடன்  பயத்தம்பருப்பு சேர்த்து வெறும் வாணலியில் லேசாக வறுக்கவும். அத்துடன் 3½ கப் தண்ணீர், பால்,  சேர்த்து குக்கரில் 5,6 சத்தங்கள் வரும்வரை குழைய வேகவிடவும்.

குக்கரைத் திறந்து அதில் தேவையான உப்பு, மஞ்சள்பொடி  சேர்க்கவும்.  4 டீஸ்பூன் நெய்யைக் காயவைத்து  முந்திரிபருப்பு,  காய்ந்த திராட்சை வறுத்துப் போடவும். 

மேலும் 2 டீஸ்பூன் நெய்யில் பெருங்காயப்பொடி, கடுகு, பொடியாக நறுக்கிய இஞ்சி,  முழுமிளகு, ஜீரகம்,  கறிவேப்பிலை தாளித்து பொங்கலில் கொட்டவும். 

பொங்கலை மேலும் சுவையாக்க, ½ டீஸ்பூன் மிளகுபொடி நெய்யில் தாளிக்கவும். பொங்கலில்  எல்லாம் சேர்ந்து கொள்ளும்படி நன்கு கிளறவும். பொங்கலின் மீது மீதியுள்ள  நெய் விட்டு சூடாகப் பரிமாறவும். கமகம கல்யாண பொங்கல் ரெடி!

இது கல்யாணங்களில் மங்களகரமாக பரிமாறப்படும்.



No comments:

Post a Comment