Wednesday 22 June 2016

மாம்பழ மோர்க்குழம்பு

தேவை
மாம்பழம் - ஒன்று
கெட்டியான லேசாக புளித்த மோர் -அரை லிட்டர்
மிளகாய் வற்றல் - 2
வெந்தயம் - தலா ஒரு டீஸ்பூன்
துவரம்பருப்பு - 2 டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் - 1/2
இஞ்சி - ஒரு சிறு துண்டு
கடுகு - அரை டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை, கொத்துமல்லி

செய்முறை:
மாம்பழத்தை தோல் சீவி கோட்டை நீக்கி வேகவிட்டு, மசித்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு  துவரம்பருப்பு, வெந்தயம், காய்ந்த மிளகாய், இஞ்சி, தேங்காய்த் துருவல் சேர்த்து வறுத்து,  சிறிதளவு தண்ணீர் விட்டு விழுதாக அரைத்து... மோருடன் கலக்கவும்.

இதனுடன் உப்பு, மசித்த மாம்பழக் கூழ் சேர்த்துக் கரைத்து வாணலியில் ஊற்றி, அடுப்பில் வைத்து ஒரு கொதி கொதித்து வந்ததும் இறக்கவும்.

எண்ணெயில் கடுகு தாளித்து சேர்த்து இறக்கவும்.கறிவேப்பிலை, கொத்துமல்லி சேர்க்கவும். பிசைந்த சாதம், துவையல் சாதத்திற்கு நல்ல மேட்ச் இந்த மோர்க் குழம்பு!

No comments:

Post a Comment