Saturday 30 April 2016

கடலை உருண்டை


                             
                                                            
தேவை
நிலக்கடலை--- 2 கப்
வெல்லம்--- 1 கப்

செய்முறை

கடலையை  வறுத்து  ஒரு  முறத்தில்  போட்டுத்  தேய்த்து  தோலி  நீக்கி  இரண்டாக  உடைத்துக்  கொள்ளவும். அல்லது  கடையில்  தயாராகக்  கிடைக்கும்  உப்பு  சேர்க்காத  கடலையை  வாங்கி  சுத்தம்  செய்து  லேசாக  சூடு  வர  வறுக்கவும்.
 


வெல்லத்துடன்  1/4  கப்  நீர்  சேர்த்து  பாகு  வைக்கவும்.  வெல்லம்  கரைந்ததும்  வடிகட்டி  மண்  நீக்கவும்.  மீண்டும்  அடுப்பில்  வைத்து  கெட்டி  கம்பிப்  பாகு  ஆக்கவும்.


பாகை  தண்ணீரில்  போட்டால்  கரையாமல்  உருட்டும்  பதம்.

பாகை  இறக்கி  கடலையில்  விட்டு  ஒரு  கரண்டிக்  காம்பால்  கிளறவும்.
 


சற்று  ஆறியதும்,  கையில்  சிறிது  அரிசி  மாவைத்  தொட்டுக்கொண்டு  சிறிய  உருண்டைகளாகப்  பிடிக்கவும்.  


ஆறியதும்  எடுத்து  வைக்கவும். சத்தான  இந்த  கடலை  உருண்டையை  குழந்தைகள்  விரும்பிச்  சாப்பிடுவார்கள்!

No comments:

Post a Comment