Thursday 21 May 2015

மோர்க் குழம்பு (வறுத்து அரைத்த முறை)



தேவை

புளித்த மோர்--- 2 கப்
குழம்பில் போட காய்கறிகள்
கத்தரி, வெண்டை, பூசணி, முருங்கை, கேரட், உருளைக் கிழங்கு, சேப்பங்கிழங்கு ஏதாவது ஒன்று
கத்தரி, வெண்டைக்காய்களை நறுக்கி எண்ணையில் உப்பு சேர்த்து வதக்கி சேர்க்கவும்.
மற்ற காய்கறிகளை உப்புடன் வேகவைத்து சேர்க்கவும்.
துவரம்பருப்பு--- தேக்கரண்டி
சீரகம்--- 1 தேக்கரண்டி
மஞ்சள் பொடி--- ½ தேக்கரண்டி
உப்பு--- தேவையான அளவு

வறுத்து அரைக்க

பெருங்காயம்-- சிறு துண்டு
உளுத்தம்பருப்பு-- 3/4 தேக்கரண்டி
கடலைப்பருப்பு---- 1 தேக்கரண்டி
தனியா--- 1½ தேக்கரண்டி
மிளகாய் வற்றல்---- 4
தேங்காய்த் துருவல்--- 4 தேக்கரண்டி
தேங்காய் எண்ணை---- 4 தேக்கரண்டி

தாளிக்க

கடுகு--- 1 தேக்கரண்டி
கொத்துமல்லி தழை
உப்பு--- தேவையான அளவு

செய்முறை

 துவரம்பருப்பு மற்றும் சீரகத்தை சிறிதளவு நீரில் ஊறவைக்கவும்.

வாணலியில் எண்ணை விட்டு அதில் பெருங்காயம் போட்டு பொரிந்ததும், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, தனியா, மிளகாய் வற்றலை தனித்தனியாக சிவக்க வறுத்து எடுக்கவும்.கடைசியாக தேங்காய்த் துருவல் போட்டு அதையும் சிவக்க வறுத்து எல்லாவற்றையும் ஊற வைத்துள்ள பருப்பு, சீரகமும் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும்.

எடுத்துக் கொண்ட காய்கறியை சிறிய துண்டங்களாக நறுக்கி, எண்ணையில் சிறிது உப்பு, மஞ்சள் பொடி போட்டு வதக்கி எடுத்துக் கொள்ளவும்.

மோரில் அரைத்த விழுது, வதக்கிய காய், தேவையான உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து கேஸில் வைக்கவும்.

குழம்பு பொங்கி வந்ததும் இறக்கவும்.கொதிக்க விடக் கூடாது. குழம்பு நீர்த்து விடும்.

தேங்காய் எண்ணையில் கடுகு தாளித்து குழம்பில் கொட்டவும்.

மேலே கொத்துமல்லியை பொடியாக நறுக்கி சேர்க்கவும்.

வித்யாசமான மோர்க்குழம்பு சாதத்தில் பிசைந்து சாப்பிடவும், புளியோதரை போன்ற பிசைந்த சாத வகைகளுக்கு தொட்டுக் கொண்டு சாப்பிடவும் சுவையாக இருக்கும்.





 

No comments:

Post a Comment