தேவை
புடலங்காய் -- ½ கிலோ
பயத்தம்பருப்பு -- ½ கப்
உப்பு -- தேவையான அளவு
கறிவேப்பிலை -- 2 கொத்து
வறுத்து அரைக்க
பெருங்காயம்--- சிறிய துண்டு
உளுத்தம்பருப்பு--- 2 தேக்கரண்டி
மிளகு--- ½ தேக்கரண்டி
மிளகாய் வற்றல்--- 2
தேங்காய்த் துருவல்--- ¼ கப்
தாளிக்க
தேங்காய் எண்ணை--- 2 தேக்கரண்டி
கடுகு--- 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு--- 1½ தேக்கரண்டி
நிலக்கடலை-- 2 தேக்கரண்டி
செய்முறை
புடலங்காயை சிறு துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும்.பயத்தம்பருப்பை வேகவிடவும். எண்ணையில் பெருங்காயம், உளுத்தம்பருப்பு,
மிளகு, மிளகாய் வற்றலை சிவக்க வறுத்து தேங்காய்த் துருவலுடன்
தேவையான நீர் சேர்த்து நைஸாக, விழுதாக அரைக்கவும்.
இரும்புக் கரண்டியில் தேங்காய் எண்ணை விட்டு, கடுகு போட்டு வெடித்ததும், உளுத்தம்பருப்பு, கடலை சேர்த்து சிவந்ததும் குழம்பில் கொட்டவும். கறிவேப்பிலையைக் கிள்ளிப் போடவும்.
சுவையான பொரித்த குழம்பு சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும். இதை புடலங்காய் தவிர முருங்கைக் காயிலும் செய்யலாம்.
hai mam
ReplyDeletei am always your fan.its simple receipes
but repeat sentence.please check them.