Saturday 7 May 2016

பருப்பு உசிலி

தேவை
நறுக்கிய கொத்தவரைக்காய் -- 1 கப்
துவரம் பருப்பு -- ½ கப்
கடலைப் பருப்பு -- ¼ கப்

மிளகாய் வற்றல் -- 6
பெருங்காயம் -- சிறு துண்டு
மஞ்சள் பொடி -- ½ தேக்கரண்டி
உப்பு -- தேவையான அளவு
எண்ணை-- 4 தேக்கரண்டி
கடுகு -- 2 தேக்கரண்டி 
  
செய்முறை:
கொத்தவரைக்காயை தேவையான உப்பு, சிறுதுளி மஞ்சள் பொடி சேர்த்து வேகவிட்டு வடிகட்டவும்.
இரண்டு பருப்புடன் மிளகாய் வற்றல் சேர்த்து அரைமணி ஊறவைத்து சற்று கொரகொரப்பாக அரைக்கவும்.அதில் தேவையான உப்பு, ம.பொடி சேரத்து நன்கு கலக்கவும்.
வாணலியில் எண்ணை விட்டு அரைத்த விழுதை அடைபோல் தட்டி, அடுப்பை சிறிதாக வைத்து சற்று வெந்ததும் தோசைத் திருப்பியால் உதிர்த்துக் கிளறவும்.

வாணலியில் எண்ணை விட்டு அரைத்த விழுதை அடைபோல் தட்டி, அடுப்பை சிறிதாக வைத்து சற்று வெந்ததும் தோசைத் திருப்பியால் உதிர்த்துக் கிளறவும்.

சற்று ரோஸ்ட் ஆனதும், வெந்த கொத்தவரைக்காயை ன்கு பிழிந்து போட்டு சேர்த்துக் கிளறவும்.

மேலும் பத்து நிமிடங்கள் நன்கு வதக்கி இறக்கவும். சாம்பார், வற்றல் குழம்புடன் தொட்டுக் கொண்டு சாப்பிட சூப்பரான மேட்ச்!

பொடி சாதம் போல சாதத்துடன் பிசைந்து, மோர்க்குழம்பு தொட்டும் சாப்பிடலாம்.

கொத்தவரை தவிர அவரை, புடல், கோஸ், காலிஃப்ளவர், வாழைப்பூ இவற்றிலும் மேற்கூறிய முறைப்படி பருப்புசிலி செய்யலாம்.

கோஸ், காரட், பீன்ஸ், பட்டாணி இவை எல்லாம் சேர்த்து மிக்சட் வெஜிடபிள் பருப்புசிலியும் செய்யலாம். 


No comments:

Post a Comment