Tuesday 17 May 2016

பொடேடோ குருமா

தேவை 
உருளைக்கிழங்கு - 3
பெரிய வெங்காயம் - ஒன்று
பூண்டு - 5 பல்
தக்காளி - ஒன்று
மஞ்சள்தூள் - சிறிதளவு
உப்பு - தேவைக்கு
அரைக்க :
தேங்காய் - ஒரு கப்
சோம்பு - ஒரு தேக்கரண்டி
கசகசா - கால் தேக்கரண்டி
பச்சைமிளகாய் - 6
சின்னவெங்காயம் - 6
பூண்டு - 6 பல்
மல்லித்தூள் - ஒரு தேக்கரண்டி
காரப்பொடி - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
இஞ்சி - சிறு துண்டு
தாளிக்க :
பட்டை - 3 துண்டு
கிராம்பு - 3
ஏலக்காய் - 2
பிரிஞ்சி இலை - 2
கறிவேப்பிலை - ஒரு கொத்து
எண்ணெய்
செய்முறை
வாணலியில் எண்ணெயைக் காய வைத்து, அரைக்க கொடுத்த பொருட்களை வதக்கி அரைக்கவும்.
பூண்டு, வெங்காயத்தை நீளமாகவும், தக்காளியை சிறு துண்டாகவும், உருளையை தோல் சீவி சிறு துண்டாகவும் நறுக்கி வைக்கவும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்கும் பொருட்களை போட்டு தாளித்து, அதனுடன் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
அதில் நறுக்கிய உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும்.வதங்கியதும் அரைத்த தேங்காய் விழுது, மஞ்சள்தூள், உப்பு, 4 டம்ளர் தண்ணீர் சேர்த்து 3 விசில் வைக்கவும்.
மல்லித்தழை தூவி பரிமாற குருமா ரெடி.
இந்த குருமா பிரியாணி, சப்பாத்தி, பூரிக்கு பொருத்தமாக இருக்கும்.


No comments:

Post a Comment