Monday 23 May 2016

வல்லாரைப்பொடி

தேவை
ஆய்ந்து சுத்தம் செய்த வல்லாரை கீரை – 3 கப்
கடலைப்பருப்பு – 8 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு –4 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 5
மிளகு - 2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
புளி – சிறிது
பெருங்காயம் – சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் – வறுக்க.
செய்முறை:
வல்லாரை கீரையை நன்றாக சுத்தம் செய்து வெய்யிலில் வைத்து  காயவைக்கவும். 
பிறகு, வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, பருப்புகள், மிளகு, சீராக, பெருங்காயத்தை தனித்தனியாக வறுத்தெடுக்கவும்.  புளியையும் வெறும் வாணலியில் வறுக்கவும். 
ஆறியவுடன், முதலில் பருப்பு, மிளகாய், உப்பு, புளி.. ஆகியவற்றை ஒன்றாகப் பொடித்து, கடைசியாக வல்லாரை இலைகளையும் போட்டு பொடித்தெடுக்கவும்.
வல்லாரை ஞாபக சக்திக்கு நல்லது. படிக்கும் குழந்தைகளுக்கு நெய்யுடன் சேர்த்து பிசைந்து சாப்பிட சொல்லலாம். மறதிக்கு நல்ல மருந்து.

No comments:

Post a Comment